மிக அதிக செலவில் எடுக்கப்பட்ட விளம்பரம் (முடிந்தால் head phoneல் கேளுங்கள்,.. அருமையான இசை சேர்ப்பு)
.
என்னன்னே தெரிலைங்க,.. வர வர மூளையே வேலை செய்ய மாட்டிங்கீது,.. சமீபத்தில் அப்படி பாதித்தவை,..
--------------------------------------------------------------------------------
நான் எப்பவுமே சொன்ன டைமில் ப்ரொஜெக்டை முடித்து கொடுக்காததால் எனக்கும் என் ஜெனரல் மேனஜருக்கும் சண்டை,.. ஒரு கட்டத்தில் இது தினமும் நடப்பது போலாகிவிட்டது,.. நான் இது பற்றி என் முன்னாள் ஜுனியரிடம் புழம்பிக் கொண்டு இருந்தேன்,..
"ஏன்தான் எனக்கு வர்ற தலைங்களெல்லாம் இப்படி இருக்கனுங்கன்னு தெர்ல,..ச்சைன்னு ஆகி போச்சு "
"விடுங்க சார், இதுக்கெல்லாம் டென்சன் ஆக கூடாது . நேத்துதான் நான் ஒரு ஜோக் படித்தேன்,..அதாவது பாஸோடு விவாதிக்கிறது பன்னியோடு சகதியில் சண்டை போடுவது மாதிரி,. ஒரு டைமுக்கு அப்புறம் நாம ச்சை நாம இந்த பன்னிகூட சகதியோட நிக்கிறோம்னு சகதியோட நினைப்போம்,. ஆனா அந்த பன்னி என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கும்"
"ஹ ஹ " சிரித்து வந்தேன்,.. மனசில்ல இருந்த பாரமெல்லாம் இறங்கிருச்சு,..
"என்னங்க,.." மனைவி ,..
பன்னிக்கதையை சொன்னேன்,..
"சுரேசுக்கு மொதல்ல நீங்கதானே பாஸ்,..""
"#$%$^%^&*#^*&*&^"
"அங்கிள் வேணாம்"
"யே,. பழம் சாப்பிடு உடம்புக்கு நல்லது"
"சரி,. கழுவி தாங்க,..தோல்ல கிருமிகெல்லாம் இருக்கும்"
ச்ச்ச்சை,.. அவமானம்,. கழுவி கொடுத்தேன்,..
"உங்களுக்கு??????"
" நான் ஆரஞ்சு சாப்பிடுறேன்"
எடுத்து சாப்பிட உட்கார்ந்தேன்,.. ச்ச்ச்சை,..கழுவலையான்னு அவன் கேட்டாமறுபடியும் அவமானம் ஆகிவிடும்,.. கழுவி விட்டு வந்தேன்,..
"அங்கிள்,..நீங்கதான் ஆரஞ்சு தோலை சாப்பிட மாட்டிங்களே,.. ஏன் கழுவி தண்ணியை வேஸ்ட் பண்ணிங்க ????
" Brilliant" வழிந்துவிட்டு வந்தேன்,..
பல்ப் வாங்கினதக்கு அப்புறம் அது டியுப் லைட்டாய் இருந்தால் என்ன?? கலங்கரை விளக்கம் பல்ப்பா இருந்தால் என்ன??
கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது,..??
-------------------------------------------------------------------------------------------
சரி வந்ததுக்கு ஒரு நியூஸ் சொல்லிவிட்டு போறேன்,..

.


செத்து செத்து விளையாடுறதே நம்ம பொழப்பா போச்சு,..
.







பின் குறிப்பு : இடப்பற்றாக்குறையால் (???) நிறைய பாகங்களை விட வேண்டியதாகிவிட்டது. எனதருமை ரசிகப் பெருமக்கள் (4 பாலோரை
வச்சிக்கிட்டு ரசிகப்பெரு மக்களாம்) மன்னித்தருவாள்வராக,..
ஆண்கள் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்க வேண்டாம். பின்னலேயே இது போலவே நடிகர்களுக்கும் வருகிறது. அது மொளகாயில் வருத்தெடுத்த பெப்பர் சிக்கன்.
(ம்ம்ம்ம்ம்ம் பாவாடை தாவணியெல்லாம் படத்தில்தான் பார்க்க முடிகிறது. மேலேயுள்ள பூமிகா படம் சூப்பர்ல,..)
ஆற்றல் அழிவின்மை விதி (நன்றி : 8ஆம் கிளாஸ் அறிவியல் நன்றாய் எடுத்த ஆசிரியர்) எப்படி எல்லா இடங்களிலும் பொருந்துமோ அதைப் போலவே 2000 வருடங்களுக்கு முன் எழுதிய திருக்குறளும் எல்லா இடங்களிலும், எல்லா கால கட்டத்திற்கும், எல்லாதுறைகளிலும், பொருந்தும் என்பதை ஒரு மொக்கையாக சொல்லி இருக்கேன். மற்றபடி உங்கள் திறமையே உங்கள் புகழ் பாடும்.
அகர முதல எழுத்தெல்லம் ஆதி
பகவன் முதற்றே உலகு
முதல் பின்னூட்டம் ஆதிக்கு இட்டால் உங்கள் பெயரை எல்லோருக்கும் தெரிந்து கொள்வார்கள். காரணம்?? அவருக்கு தமிழிஸீல் வரும் ஓட்டைவிட அவருக்கு வரும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை அதிகம். அவரின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம். அதனால் நிறைய பேர் பார்ப்பார்கள்!!! (தெரிந்து ஒன்னும் ஆகாது என்பது வேற விஷயம்,.. சும்மா ஒரு விளம்பரம்ம்ம்ம்ம்ம்,.... வசிஷ்டர் ஆதி என்னை மன்னிப்பாராக,.. )
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்து விடல்.
பின்னூட்டத்தில் ஹாய் சொன்னால் பதிலுக்கு ஹாய் சொல்லு. டேய் நாயே சொன்னால் பதிலுக்கு ஆருயீர் நண்பரே என்று சொல்லு.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
எல்லா பின்னுட்டத்திற்கும் ஒரு பதில் பின்னூட்டம் போடு,. நன்றி சொல்லிவிடு. மறந்துவிடாமல் அவர் வலைக்கு சென்று உங்கள் கவிதை சூப்பர்னு கூசாம பொய் சொல்லு,..
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற் மாகும் இறைக்கு
(பொருள்: முன்னே தன் குற்றத்தைக்கண்டு நீக்கிக் கொண்ட பிறகு பிறருடைய குற்றங்களையும் கண்டறிந்து நீக்குவானால் அவனிற்கு என்ன குற்றம் உண்டாகும்??)
நன்றாக புலம்பு,.. அவன் இதனை கண்டுக்க மாட்டிங்றான், இவன் காசு புடுங்குறான், ஐ. நா சபையே இல்ல, இங்கே யவனும் சரி இல்ல, பொண்டாட்டி டி.வி பார்க்கவிடமாட்டிங்குறா அப்படீன்னு எல்லாத்துக்கும் எல்லாரைப்பத்தியும் ஆபீஸ் கம்ப்யூட்டர்ல, ஆபீஸ் நேரத்துல, ஆபீஸ் இன்டெர்னெட் கனெக்சன்ல மாசத்துக்கு ஒரு புகார் பதிவை போட்டுக்கிட்டே இரு,.. (யவருமே பாலோ பண்ண முடியாத குறள் இது. வெற்றியே குறிக்கோளாய் கொண்டவர்கள் குறளை ஓரத்தில் வைத்துவிட்டு உங்கள் குரலை உயர்த்திக் கொண்டே இருங்கள். எல்லோரும் இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லனும்!!!)
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
சில நேரங்கள்ள இந்திய ராணுவம் கோவையில் க.மூ.சா தொண்டர்களிடம் தோல்வி, பிரபாகரன் இறந்தார் என செய்தி பதிவு வரும். அது போன்ற பதிவுகளை போடும் முன்பு உண்மையை தெரிந்து கொண்டு போடு.
தோன்றின் புகழோடு தோன்றுக ஆக்திலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
நீங்கள் சில நேரங்களில் மிக பிரபலமானவராக இருக்கலாம். நீங்கள் பதிவுத்துறைக்கு (இது ரெஜிஸ்டர் ஆபிஸ் இல்ல,.. பதிவுத்துறை என்றால் பதிவர்கள் இருக்கும் துறை) வந்தால் மிக குறுகிய காலத்தில் மேலே வந்து விடுவீர்கள்.
பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
யாரையும் வலைப்பதிவில் கிண்டல் செய்யாதீர்கள். அதே நபர் பின்னொரு நாளில் உங்கள் மோசமான கவிதையை நாறடிப்பார்.
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
(பொருள் : நல்ல ஆண்மை என்பது தன் குடும்பத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுதல்,..) சக பதிவரின் பிறந்த நாள், அவர் குழந்தையின் பிறந்த நாள் நினைவு வைத்து ஒரு பதிவு போடு. நண்பர் ஆவியில் கதை எழுதியது பாராட்டி ஒரு பதிவு போடு. எல்லாவற்றையும் போட்டுவிட்டு பொண்டாட்டி பிறந்த நாளை மறந்தால், வீட்டில் பட்டினி போட்டுவிடுவார்கள். இதற்கு பரிகாரமாக நீங்கள் காதல் ரசம் சொட்ட சொட்ட காலையில் ஒரு காதல் கவித பதிவு போட்டுவிடுங்கள். மாலை வீட்டில் சுடசுட ரெடியாக இருக்கும். (எந்த அளவிற்கு சூடு என்பது உங்களுக்கு வரும் பின்னூட்டத்திற்கு நேர் விகிதத்தில் இருக்கும்)
நன்றி : ஆசிரியர் - திருக்குறள் (ஜோதி, இம்புட்டு நல்லவனாடா நீ )