சுவாரஸ்யங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுவாரஸ்யங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 அக்டோபர், 2010

தூக்கணாங்குருவி, சுவாரஷ்யங்களின் பெட்டகம்,..


ஆச்சர்யங்களின் பொக்கிஷம்,. சுவாரஷ்யங்களின் பெட்டகம்,.. அவைதான் தூக்கணங் குருவிகள்,..

தூக்கணாங்குருவி பொதுவாக தெற்காசியா முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில்தான் இவை பெரும் எண்ணிக்கையில் இருந்தன. ஆம் இருந்தன. எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என தெரியாது. ஆனால் அவை கட்டிய கூட்டை படத்திலாவது பார்த்திருக்காலம்.
இன்றைக்கு இவைகளின் எண்ணிக்கை மிக மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான் இந்த பதிவு,..

தூக்கணங்குருவிகளின் தனித்தன்மை அவைகளின் கூடுகள்தான்.

வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட (கவனிக்க,.. கட்டபட்ட இல்லை,. ) இவற்றின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே உருண்டையாகவும் கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்னோக்கி இருக்கும், உள்ளே இருக்கும் அந்த வடிவமைப்பையும், மிருதுவையும் பார்க்கும் போது நாம் கூட்டிற்குள் போய் தூங்கி கொள்ளலாமா என ஆசை வருவது தவிர்க்கமுடியாது.



கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை போல் பயன்படுத்தி கூட்டை உருவாக்குகின்றன. இவைகளின் சிறப்பான வடிவு கொண்ட அலகால் வைக்கோலையும், புல்லையும் முடிச்சு (??) போட்டு காட்டபடும் இவற்றின் கூடுகள் மிக உறுதியானவை. இதனால் வைக்கோல் கூடு பிரிவதில்லை, காற்றினால கீழே விழுவதில்லை. முக்கியமாக உறுதியான, பாதுகாப்பான கூட்டை உருவாக்கும் பொறுப்பு ஆண் பறவைகளை சார்ந்தது. (இவைகளிலுமா??)


செழிப்பான நீர் பகுதி, உயரமான பனை/தென்னை மரம், போன்ற இடங்களில் கூட்டை கட்டுகின்றன. கூட்டம் கூட்டமாக வாழும் இவைகளின் கூட்டத்தில் 20-30 வரை கூடுகள் இருக்கும். ஒரு கூடு கட்ட 500 தடவை சேகரிப்பிற்காக பறக்கின்றன. மொத்தம் 4000 பதர்களை கொண்டு இவை கூடு கட்டுகின்றன. மொத்தம் கூடு கட்ட 18 நாட்கள் எடுத்து கொள்கின்றன. அவற்றில் குடுவை போல இருக்கும் பகுதிக்கு 8 நாட்கள் வரை எடுத்து கொள்கின்றன.




கூடு ஓரளவிற்கு முடிந்த பின் ஆண் குருவி வாசலில் இருந்து பறந்து செல்லும் பெண் குருவிக்களுக்கு சமிக்கை கொடுக்கும் (என்னை பார் என் கூட்டை பார்). பின் பெண் குருவி உள்ளே வந்து பார்வை இடும். அதற்கு திருப்தி இருந்தால் இணைவிற்கு ஓகே சொல்லிவிடும்.



பின் நீளமான வால் போன்ற பகுதியை கட்ட ஆரம்பித்து கூட்டை முடிக்கும். கூட்டின் உட்பகுதிகளில் பெண்குருவிகளின் விரும்பத்திற்கு ஏற்றார் போல் கட்ட வேண்டியது ஆண் குருவிகளின் பொறுப்பு. சில நேரங்களில் உட்கட்ட அமைப்புகளில் திருப்தியுறாத பெண் பறவைகள் தாங்களே தன் விருப்பத்திற்கு ஏற்றது போல கட்டிக்கொள்கின்றன.(அப்போது ஆண் பறவைகள் மிக டென்சனாய் இருக்கும்,.. கிளைண்ட் பிடிக்கலைன்னு project கேன்சல் பண்ணிட்டா??),..



ஆனால் கூட்டின் வடிவமைப்பை விட அது பாதுகாப்பான இடத்தில் இருக்கிறதா என்பதே முக்கியத்துவம் பெறுகின்றன. ஆண் பறவைகள் நிறைய கூடுகளை கட்டி முடிக்காமலே வைத்திருக்கும். பெண் துணை உறுதியானதும் பின் கூடு முழுமையடையும்,. பெண் பறவை 3-4 முட்டைகளை இடும் (அதுக்கு மேலே விட்டா கூடு கீழே விழுந்திரும்மில்ல,..),. பெண்பறவை 15 நாள் வரை அடைகாக்கிறது.குஞ்சு ஓரளவிற்கு வளர்ந்து பறந்து சென்றுவிடட்டவுடன் ஆண் குருவி அடுத்த பெண் குருவிக்கு அடுத்த கூட்டை காட்ட ஆரம்பிக்கிறது. பறவைக்குஞ்சு அருகில் உள்ள பகுதிகளுகு இடம் பெயர்கிறது. அப்படி இடம் பெயர்ந்தாலும் அதி இரண்டு கீ.மீக்குள்தான் இருக்கும்,.




இவை ஆச்சர்யம் வாய்ந்த புத்திசாலிப்பறவைகள். நகரங்களில் இருப்பவர்கள் இரவில் ஒளி தரும் மின்மினிப்பூச்சிகளை பார்த்திருக்க வாய்ப்பில்லை,.. இந்த தூக்கணங்குருவிகள் இந்த பூச்சிகளை எடுத்து ஈரமான களிமண்ணில் வைத்து தன் கூட்டின் சுவற்றில் ஒட்டிவிடும். இதனால் இரவு கூட்டிற்கு வெளிச்சம் கிடைக்கும்.

வழக்கமாக நாங்கள் கிராமத்தில் முதுகு சொறிய இவற்றின் பழைய கூட்டைப் பயன்படுத்துவது உண்டு. இந்த முறை ஊருக்கு போன போது நைலானாலான தேய்ப்பான் கிடைத்தது. என்னவென்று விசாரித்தால் நாமதான் நெல்லும் போடறதில்ல, கம்பும் போடறதில்லை, எப்படி குருவி தென்னை மரத்தில் கூட கட்டும் என பதில் வந்தது,. உடம்போடு ஒட்டாத அந்த நைலான் உதவியால் அழுக்கு தேய குளித்துவிட்டு வந்தேன். ஆனால் மட்டும் அந்த குற்ற உணர்ச்சி அப்படியே தொக்கி நிற்கிறது,.. தூக்கணங்குருவிகளின் மறைவு யாரால்??


நம் குழந்தைகள் இன்னும் எவற்றையெல்லாம் இழக்கப்போகின்றனர் எனத் தெரியவில்லை,.. அவர்களின் தூக்கணாங்குருவிகள் கம்ப்யூட்டரோடு முடிந்துவிடுமா??

.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

மினி மீல்ஸ் (செப் 2010)

சல்யூட்
9 வயதில் பன்னிரெண்டாம் வகுப்பு,
10 வயதில் B.Sc (physics),
12 வயதில் M.Sc (physics),
21 வயதில் PhD (Quantum Computing) Indian Institute of Science (IISc) முடித்து இந்தியாவிலேயே மிக இளவயதில் முனைவர் பட்டம், 2003 ஆம் ஆண்டு டைம் பத்திரிக்கையால் "most gifted youngsters" எனப் புகழ்மாலை,
22 ஆம் வயதில் உலகப்புகழ் பெற்ற IIT BOMBAYல் Asst. Professor தேர்வாகி IITகளிலேயே மிக இளவயது பேராசியர் எனப் பெருமை.
மற்றும்
"most gifted Asian youngsters" - TIME magazine,
"Superteen" - SCIENCE,
"Physics Prodigy" -TIMES
"Master Mind" - The WEEK
"one of the smartest Indian யூன்க்ச்டேர்ஸ்" - OUTLOOK



பாட்னாவை சேர்ந்த "தாதாஹத் அவதார் துளசி"தான் இத்தனை பெருமைக்குரியவர்.

2001 ஆம் ஆண்டு நோபல்குழு வரை சென்ற இவரை ஒரு தகுதியும் அற்றவர் எனவும், மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறார் எனவும் தூற்றியது. அதே ஆள் பின்னர் உலக அளவிலான பல பட்டங்களை பெற்றார்.

உலக அளவிலான பல்கலைகழகத்தில் இவருக்கு மிக அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் இந்திய அளவில் "க்வாண்டம் அடிப்படையில் அமைந்த அதிவேக கணிப்பொறியை உருவாக்குவதே தன வாழ்க்கையில் லட்சியம்" என்ற லட்சிய நோக்கோடு IIT பேராசியராக சேருகிறார்

IIT பக்கம் நுழைவதே பெரிதாக இருக்கையில், இவ்வளவு சின்ன வயதில் இத்தனை சிறப்புகளுடன் பேராசிரியராக அமரும் இவருக்கு நான் அடிக்கிற இந்த முதல் சல்யூட்டால் நான் பெருமை கொள்கிறேன்.

ஐடியா மாமு ஐடியா

டென்மார்க்கில் உள்ள க்ரௌன் ப்ளாஸா ஹோட்டல் தன் ஓட்டலில் 30 டாலர் மதிப்புள்ள மதிய உணவை இலவசமாக தருகிறது. அதற்கு நீங்கள் அங்கிருக்கும் சைக்கிளை 15 நிமிடம் ஓட்டினால் போதும். இதை ஓட்டும் போது இதனுடன் இணைத்துள்ள ஜெனரேட்டர் 10Wh அளவிற்கு மின்சாரம் தயாரிக்கிறது. இதை அதன் உள் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி கொள்ளுகிறது. எப்புடி ஐடியா? உடம்பும் குறைஞ்சது, சோறும் கிடைச்சது மின்சாரமும் கிடைச்சது, சுற்றுசூழலும் பாதுகாப்பாச்சு. யாருக்கும் நட்டமில்ல.


கொஞ்சம் பெர்சனல்

இங்கே நான் மட்டும் தனியாக பேச்சுலராக ஓட்டிக் கொண்டிருப்பதால் சாப்பாட்டிற்கு கஷ்டம். வீட்டில் சாப்பிட்டு பழகிவிட்டதால் வெளியில் போய் சாப்பிடவும் பிடிக்கவில்லை. இருந்தாலும் வேலைப்பளுவின் காரணமாகவும் நம் இயல்பான சோம்பேரித்தனத்தின் காரணமாகவும் சமைக்க முடியவில்லை. பிடிக்கவும் இல்லை. ஆனால் தங்கமணியிடம் மட்டும் வீட்டில்தான் சாப்பிடுகிறேன் என பொய் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நேற்று ஒரு எடக்குமுடக்காண (அப்படின்னா என்னான்னு கேக்க கூடாது) ஒரு உரையாடல்,..

"சாப்பிட்டீங்களா??"
"இல்ல இனிதான் வீட்லபோய் சாப்பிடணும்"
"ஆமாங்க,.. நல்லா நியாபகம் வெச்சுக்குங்க,. வீட்டுலையே எதையாச்சும் சமைச்சு சாப்பிட்டுக்குங்க,.. உங்க உடம்புக்கு ஒத்துக்காது"
"ஆமா,. சரவணபவன்ல இருந்து பார்சல் வந்துருச்சு,..வீட்டுல போய்தான் சாப்பிடணும்,..(அய்யய்யோ,.. உளரிட்டேனே, ரவுண்டு கட்ட போறா,...)"
"ஆமாங்க,.. வீட்டுலேயே சாப்பிடுங்க,. கண்டதை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதீங்க"

மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் - என்ன ஒரு ரம்மியமான பாடல் இல்ல,...

சமூகம்
ஒவ்வொரு வருடமும் கல்வியில் பெண்கள்தான் முதல் இடத்தில் வருகிறார்கள். இது பள்ளியாகட்டும், கல்லூரி ஆகட்டும். மதிப்பெண் சிறப்பாக எடுக்கும் மாணவிகள் தங்கள் பணிகளிலோ இல்லை சிறப்பான கண்டுபிடிப்புகளிலோ ஏன் ஜொளிக்கவில்லை??? கல்வியின் பலன் அதை முறையான பயன்பாடாக (Application) கொண்டு வருவதில்தான் இருக்கிறது. வெறும் பேப்பரில் மதிப்பெண்ணாக பைல் பண்ணி வைப்பதில் என்ன பலன். எங்கே இடிக்கிறது??? மகளீரை முன்னேறி வரவிடாமல் தடுப்பது எது ?

பார்க்க ரசிக்க

இது மனிதனால் உருவக்கப்பட்ட பூக்கள். பிரமிப்பான வேலை இல்லை??





பிடித்திருந்தால் ஒரு ஓட்டு,..

. OO.

வெள்ளி, 25 டிசம்பர், 2009

எலி வாந்தி எடுக்காது. யானை ஜம்ப் பண்ணாது - II

சில நேரங்களில் இயற்கை சுவாரஸ்யமான பல தகவல்களை நமக்கு விட்டு செல்கிறது. இதே போல ஒரு பதிவை நாம் ஏற்கனவே பார்த்தாச்சு. இது இரண்டாம் பகுதி


டால்பின்கள் ஒரு கண்ணை திறந்து கொண்டே தூங்கும்.(நான் ஒரு வாயை திறந்துகொண்டே தூங்குவது வழக்கம்)

நிலத்தில் மைல் என்பது 6080 அடி. கடல் நீரில் (நாட்டிகள் மைல்) 6280 அடி. (மைலும்,அடியுமே குழப்பம், இதில் இன்னும் வேற,..)


ஜெல்லி மீன்களில் 95% தண்ணீர். தோராயமாக ஒரு மனிதனின் உடலில் 66% பங்கு நீர். (நமக்கு தெரிந்த ஒரே தண்ணி,..வுவாக்க்க்க்க் தண்ணி,..)

போலார் கரடிகள் இடதுகை பழக்கமானவை.(இடது கைகள் ஆட்களை பார்த்திருக்கேன் ஆனால் போலார் கரடிகளை பார்த்தது இல்லை,நீங்க யாராவது??)

நத்தைகள் தொடர்ந்து முன்று வருடம் தூங்ககூடும். எறும்புகள் சுத்தமாக தூங்குவதில்லை. (எங்க ஆபீஸ்ல எறும்பு மாதிரி வேல பாக்க சொல்றாய்ங்க, ஆனா எனக்கு நத்தை மாதிரி இருக்க ஆசை,..)

ஹம்மிங்க் பறவைகள் என்ற ஒரே பறவையினம் மட்டுமே பின்னோக்கி பறக்கும். கங்காரு மட்டும் பின்னோக்கி நடக்க முடியாது.(காரணம் எனக்கு தெரியும் கங்காருக்கு முன்னோக்கி வைத்த காலை பின்னோக்கி வைக்க பிடிக்காது)

கையின் முட்டிகளை நாக்கால் தொடுவது நடக்காது ஆனால் ஒரு சிலர் இதிலும் வெற்றி பெற்று உள்ளனர்.(என் பையன் நாக்கால் மூக்கை தொடுவான்)



கண்களை திறந்துகொண்டே தும்முவது என்பது நடக்காத காரியம். (தும்மிக்கொண்டே கண்களை திறக்க முடியுமா??? ம்ம்ம்,.இப்படியெல்லாம் யோசிக்க கூடாது, மூளை வேஸ்டாகுதுல்ல??)

லட்சக்கணக்கான மரங்கள் அணிலால் நடப்படுகின்றன. பழங்களை, விதைகளை அவசரத்தில் புதைத்துவிட்டு பின் மறந்துவிடுவது அவைகளின் வழக்கம். (லட்சக்கணக்கான மரங்கள் அரசாங்கத்தால் வெட்டப்படுகின்றன. மரங்களை அவசரத்தில் வெட்டிவிட்டு பின் வெட்டப்பட்ட மரங்களை மறந்துவிடுவது அவர்களின் வழக்கம்)

போரில் இறந்த ராணுவ அதிகரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது ஜப்பானின் வழக்கம்.(1956ல செத்தஅம்பேத்காருக்கு 1990ல நாம் கொடுக்குற பாரத ரத்னா மாதிரி இல்லாம இருக்கணும் ,..)

டெலிபோனை கண்டுபிடித்த கிரகாம்பெல் மனைவிக்கோ, மாமியாருக்கோ போன் பண்ணியதில்லை. காரணம் அவர்கள் காதுகேளாதவர்கள்.(ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடி பெண்கள் இருக்கிறார்கள் என்பதற்கான வரலாற்று ஆதாரம்)

பூமியின் சுழலும் வேகம் குறைவதால் இன்னும் மில்லியன் ஆண்டுகளில் லீப் வருடம் இருக்காது. (எல்லாம் சரி. பூமி இருக்குமா??? நல்லா பண்றாய்ங்க ஆராய்ச்சி,..)

நன்றி: http://didyouknow.org/fastfacts/

சுவாரஸ்யங்கள் தொடரும்,..

ok,.. இவ்ளோதூரம் வந்து படிச்சாச்சு, அப்டியே தமிழீஸ்ல ஒரு ஓட்டை போட்டு போங்க,..




.

வெள்ளி, 11 டிசம்பர், 2009

என் கேள்விக்கு என்ன பதில்?


  1. எனக்கு மட்டும் அல்ல, இங்கு தமிழ் படிக்கும் அனைவருக்கும் திருக்குறளைப் பிடிக்கும். ஆனால் திருவள்ளுவர் எழுதிய அந்த திருக்குறள் எங்கு இருக்கிறது? யாரிடம் இருக்கிறது. எவருக்காவது தெரியுமா? சொல்லுங்களேன்.
  2. தமிழ் நாட்டில் சில ஆறுகள் ஓடுகின்றன. அதில் பலவற்றில் தண்ணீர் இல்லை. (இதில் கூவத்தை கணக்கில் சேர்க்காதீர்கள்). அதில் வைகையும் உண்டு. எனக்கு தெரிந்து மதுரையில் வெள்ளம் என ஒரே ஒரு முறை கேள்விப்பட்டு இருக்கிறேன். இந்த வைகை கடலில் கலக்காது என எல்லோருக்கும் தெரிந்த தகவல்.வைகை ஆறு என்பது இருப்பது உண்மை. ஆனால் எங்கே அது காலி ஆகிறது? அதாவது முற்று பெறுகிறது?
  3. எனக்கு தெரிந்து பழந்தமிழர்கள் இயற்கை மட்டுமே வணங்கி வந்து இருக்கிறார்கள். இப்போதும் எங்கள் கிராமத்தில் பொங்கலின்போது காட்டையும், மாட்டையும் சுத்தப்படுத்தி மண்ணை வைத்து கும்பிடுவதுதான் வழக்கம். எனக்கு தெரிந்தவரை என் பல கிராமத்து நண்பர்களின் வீடுகளிலும் இதுதான் நடக்கிறது. ஆனால்,.. (ம்ம்ம் கேள்வி வந்துவிட்டது?) எப்போது நம் இயற்கை பஞ்சபூதங்கள் பஞ்சரானது?? நாம் மண்ணாய் வணங்கும் பூமி திருமாலிற்கு ரெண்டாம்தாரமானாள். ஆற்றையும் சிவனிற்கு ரெண்டாம்தாராமாக்கி கொண்டையில் உட்காரவைத்தார்கள். வாயு, ஆகாயம் எல்லோரையும் மூன்றாம்தர கடவுள் ஆக்கினர். நம் மூதையாரை அசுரர் ஆக்கினார்கள். இதை செய்தது யார்?? எப்போது நம் இயற்கை பஞ்சபூதங்கள் பஞ்சரானது?? எப்படி?
  4. பொதுவாக எல்லா உயிரினங்களும் நீந்தும் தன்மை கொண்டவை. வண்டு, எலி, பூனை, மாடு, யானை என எல்லா அளவில் உள்ள உயிரினங்களும் நீந்தகூடியவை. ஒரு முறை NGCயில் யானை அடித்த நீச்சலைப் பார்த்து அசந்துவிட்டேன். சின்ன வயதிலேயே எனக்கு இந்த சந்தேகம் இருந்ததால் ஒரு முறை எங்கள் குட்டையில் எங்கள் வீட்டு பூனையை தூக்கிப் போட்டு அது அழகாக நீந்திவரும் காட்சியை கண்டு ரசித்து(????) இருக்கிறேன். ஏன் பாலாய் போன ஆறறிவு ஜீவன் மட்டும் ஆற்றில் தவறி விழுந்து சாகிறது. மனித உயிரினம் நீச்சலை தொலைத்தது எப்போது?




  5. ஆற்றலை ஆக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. ஒரு வகையில் இருக்கிற ஆற்றல் இன்னொரு வகையில் மாறுகிறது. ரொம்ப சரி. ஆனால் காலங்காலமாக பூமிக்கு வரும் சூரியனிடம் இருந்து வரும் ஆற்றல் என்னவாகிறது?? அது எங்கே தொலைகிறது.?
இப்போதைக்கு இது போதும். பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டம் போடுங்கள். பதில் தெரியாதவர்கள் ஓட்டையாவது போடுங்கள் (என்னாத்துக்குன்னு குண்டக்க மண்டக்க கேள்வி கேக்க கூடாது)

செவ்வாய், 7 ஜூலை, 2009

அடப்பாவி,.. ஆம்ஸ்டிராங் நிலவில் இறங்கியது ஏமாற்று வேலையா?

நாம் ரொம்ப வருஷத்திற்கு முன் வரலாறு (வரலாறுன்னுதான் நினைக்கிறேன்,.. இப்ப அது சமூக அறிவியல்) படிக்கும் போது நிலவில் முதன் முதலில் இறங்கியவர் நீல் ஆம்ஸ்ராங்க், மற்றும் ஆல்டரின் என படித்து இருந்தேன். ஆனால் அது டுபாக்கூர் என்பதும் அதில் நிறைய தகிடுதத்தங்கள் இருக்கின்றன என்பது நேற்று கார்டியன் இதழை பார்க்கும் போதுதான் தெரிந்தது. அவர்கள் விமர்சித்தது சரியா, தவறா என தீர்மானிக்கும் அளவிற்கு எனக்கு அறிவு கிடையாது. ஆனால் அவர்கள் கேட்ட கேள்விகள் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்ததால் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என இந்த பதிவு.

நிலவில் நிலை நாட்டப்பட்ட கொடி எந்தவொரு வளி நிலையும் (atmosphere) இல்லாமல் எப்படி படபடக்கிறது?

படங்களில் உள்ள பொருட்களின் நிழல்கள் வெவ்வேறு கோணங்களில் உள்ளன, TV studioவில் வரும் பிம்பங்களை போல இங்கும் அங்கும் இருக்கிறது.
வானவெளி முழுக்க விண்மீன்களால் ஆனது. ஆனால் எந்த புகைபடத்திலும் ஏன் அது விழவில்லை?

நிலவில் விழுந்த ஷூ காலடிதடங்கள், போலியானவை. காரணம் காலடித்தடங்களை நிலைத்து வைக்க ஈரப்பதம் தேவைப்படும். இல்லையென்றால் வறண்ட மணலில் மூடிக்கொள்வது போல் மூடிக்கொள்ளும்.

அப்போலா நிலவில் இறங்கியதாக குறைப்படும் படத்தில் உள்ள கல்லில் C என்ற எழுத்து உள்ளது.அது அடையாளத்திற்காக வைக்கப்பட்ட கல். இது முழுக்க முழுக்க நாடகம்.


நிலவை ஆராய சென்றவர்கள் இறங்கும் போது, மீண்டும் கிளம்பும் போதும் ஏற்கனவே ஒருவர் நிலவில் நின்று அவர்களை புகைப்படம் எடுப்பதாக தெரிகிறது. நிலவில் முதன் முதலில் காலடி வைத்தவர் நீல் ஆம்ஸ்டிராங் என சொல்லும் போது ஏற்கனவே ஒருவர் அங்கு இருப்பது எப்படி???



இப்படி வாழைமரத்தில் அடித்த ஆணியாக எளிதாக வெளி நாட்டு ஆராய்ச்சி அறிஞர்கள் கேள்விகளை இறக்க, அதற்கு அமெரிக்காவின் நாஸா அளிக்கும் விளக்கங்கள் கீழே.


நிலவில் நிலை நாட்டப்பட்ட கொடி எந்தவொரு வளி நிலையும் (atmosphere) இல்லாமல் படபடக்கிறது?

நிலவில் கொடியானது படபடப்பதாக எந்த வீடியோவும் இல்லை, ஆம்ஸ்ராங்க் கையில் தொட்டபோது சிறிது ஆடியதை தவிர. அப்படியே ஆடியிருந்தால் அது இன்றும் தொடர்ந்து ஆடி கொண்டே இருக்கவேண்டும். காரணம் எந்த வளி நிலையும் (atmosphere) , உராய்வும் (friction) இல்லாததால் இன்றும் படபடத்துக்கொண்டே இருக்க வேண்டும்

படங்களில் உள்ள பொருட்களின் நிழல்கள் வெவ்வேறு கோணங்களில் உள்ளன, TV studioவில் வரும் பிம்பங்களை போல இங்கும் அங்கும் இருக்கிறது.

மேலே சொன்னது உண்மையானால் ஒரே ஒரு பிம்பம் மட்டும் எப்படி வருகிறது. நிறைய ஒளி மூலங்கள் இருப்பது உண்மையானால் நிறைய நிழல்கள் வரவேண்டும் இல்லையா? கூற்று தவறே.

வான்வெளி முழுக்க விண்மீன் களால் ஆனது. ஆனால் எந்த புகைபடத்திலும் ஏன் அது விழவில்லை?

புகைப்படக்காரர்கள் எடுத்தது அதிக வெளிச்சம் கொண்ட பளபளக்கும் பொருட்களை. இதனால் அதிவிசை மூடு திறன் கொண்ட கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் மங்கலான பின் பகுதிகள் இருட்டாகவே தெரியும்.

நிலவில் விழுந்த ஷூ காலடிதடங்கள், போலியானவை. காரணம் காலடித்தடங்களை நிலைத்து வைக்க ஈரப்பதம் தேவைப்படும். இல்லையென்றால் வறண்ட மணலில் மூடிக்கொள்வது போல் மூடிக்கொள்ளும்.

நிலவில் உள்ள மணல் வெவ்வேறு அளவும், வெவ்வேறு வடிவமும் கொண்டவை. இவற்றை அச்சாக நிலை நிறுத்த ஈரப்பதமோ, உள்ளழுத்த விசைகளோ (compressible forces) தேவையில்லை. பூமியில் கூட இதே மாதிரி துகள்கள் இருக்கின்றன. தரையில் முகத்திற்கு பூசும் தூளை தூவிவிட்டு அதன் மேல் நடந்து பாருங்கள். தெரியும்.

அப்போலா நிலவில் இறங்கியதாக கூறப்படும் கல்லில் C என்ற அடையாள எழுத்து உள்ளது. அது அடையாளத்திற்காக வைக்கப்பட்ட கல். இது முழுக்க முழுக்க நாடகம்.

நாஸாவின் நெகடிவிலும், முதன் முதலில் வெளிவிட்ட புகைப்படங்களிலும் இது இல்லை. பின்னால் மீண்டும் எடுக்கையில் முடி இல்லையென்றால் நார் சிதைந்து வந்து இருக்கலாம்.


நிலவை ஆராய சென்றவர்கள் இறங்கும் போது, மீண்டும் கிளம்பும் போதும் ஏற்கனவே ஒருவர் நிலவில் நின்று அவர்களை புகைப்படம் எடுப்பதாக தெரிகிறது. நிலவில் முதன் முதலில் காலடி வைத்தவர் நீல் ஆம்ஸ்டிராங் என சொல்லும் போது ஏற்கனவே ஒருவர் அங்கு இருப்பது எப்படி???


ஆம்ஸ்டிராங்க்கின் சின்ன நடை (வீடியோ) ஈகில் லாண்டரின் (பயணித்த ஊர்தி) வெளியில் வைத்து இருந்த கேமராவில் இருந்து எடுக்கப்பட்டது. ஆம்ஸ்டிராங்கின் மற்ற ஸ்டில் புகைப்படங்கள் மற்றொரு பகுதியிலிருந்து ஆல்டரினால் எடுக்கப்பட்டது.

எப்படி.??? எல்லாம் குழப்பமா இருக்கா??? எனக்கும் அப்படிதான் இருக்கு. இந்த குழப்பத்தில ஓட்டு போடவும், பின்னூட்டம் இடவும் மறந்திடாதிங்க,..

அப்பதான் பூமியின் எடையை, நிலவின் எடையை எப்படி கண்டுபிடிக்கிறாங்கன்னு பின்னால் வரும் பதிவுகள்ள .சொல்லுவேன்


சனி, 30 மே, 2009

எலி வாந்தி எடுக்காது. யானை ஜம்ப் பண்ணாது.

ஒரே மாதிரியான பதிவுகளை படித்து போரடித்துவிட்டதால் நம் பேனாவை தூக்கியே ஆகவேண்டிய சூழ்னிலை ஏற்பட்டு விட்டது. மற்ற பதிவர்கள் தங்கள் மொக்கையை நிறுத்தும்வரை இந்த மொக்கை தொடரும். (அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்துரேனு நாயகன் கமல் மாதிரியெல்லம் நான் சொல்லலைங்க,..)

  • 747 ரக விமானத்தல் முதன் முதலில் உருவாக்கிய போது 75000 வரைபடங்கள் உருவாக்கப்பட்டன. விமானத்தில் உட்கார்ந்து இருக்கும்போது நமக்கும் வெளிப்பகுதிக்கு உள்ள குறைந்தபட்ச தொலைவு 7.5 செ.மீ. (நம் மூளை நமக்கும் விமான பணிப்பெண்ணுக்கும் உள்ள தொலைவையே யோசிக்கிறது).
  • டைட்டானிக் கப்பலை தயாரிக்க 7 மில்லியன் டாலர் ஆனது. ஆனால் அதையே படமாய் எடுக்க 200 மில்லியன் டாலர் ஆனது.( சும்மாவா?? 717 மில்லியன்ல லாபம் பார்த்தானுங்க,..).
  • ஆண்களின் சட்டையில் பட்டன்கள் வலதுபுறம் இருக்கும், பெண்கள் சட்டையில் இடதுபுறம் இருக்கவேண்டும். ( அர்த்தனாரீஸ்வரிடம் இருந்து உருவான கான்சப்ட்டா??)
  • தலையை திருப்பாமலே பின்னால் பார்க்கும் வடிவமைப்பை முயலும்,கிளியும் கொண்டிருக்கின்றன. (நல்ல வேளை. நமக்கு இல்லை. சும்மாவே சைட்ல வர்ர பிகரை பாத்துட்டு, நடந்து போறவன் காலுக்குள்ள வண்டிய பார்க் பண்றானுங்க,..).
  • இதயம் பம்ப் செய்யும் ரத்தம் 30 அடிதூரத்திற்கு செல்லும். (மன்னிக்கவும்,.. எனக்கு இதயத்தின் discharge pressure மட்டுமே தெரியும்).
  • மூளையில் 80% நீரால் ஆனது, கைரேகை எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்று தெரிந்ததே. நாக்கின் ரேகையும் அப்படியே. எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை (தண்ணி நிறைய குடிச்சா மூளை வளருமாங்க????).
  • உங்களின் முகரும் சக்தி பத்து வயதாக இருக்கும்போது உச்சத்தில் இருக்கும். (அதனாலதான் அம்மாவின் சாப்பாடு சூப்பர்னு சொல்றோமோ? ச்ச,.. தப்பு தங்கமணிகளிடம் இல்லங்க,.. நம்மிட்டதான் இருக்கு)
  • அமெரிக்கா மற்றும் கனடா மக்கள் தொகையைவிட நம் வாயில் இருக்கும் பாக்டீரியா எண்ணிக்கை அதிகம். (வாயில இருக்கற பாக்டீரியா O.K. மனசுல்ல இருக்கிறது???.)
  • 300 எலும்புகளுடன் பிறக்கும் நாம் வளர்ந்த பின் 206 எலும்புகளை மட்டுமே கொண்டு இருக்கிறோம். நம் தொடை எலும்புகள் காங்க்ரீட்டை விட வலிமையானவை. (அதனாலதான் பயந்தங்கொள்ளிகளை தொடை நடுங்கின்னு சொல்றோம்மோ???)
  • எலி வாந்தி எடுக்காது. யானை ஜம்ப் பண்ணாது. (அதனால்தான் எலி எல்லாத்தையும் தைரியமாய் தின்னுதோ??).
  • யானை 4.5 கி.மீ. தொலைவில் உள்ள தண்ணீரையும் கண்டுபிடித்துவிடும். (ம்ம்க்க்கும்,.. எனக்கு 4500 கிமீ தொலைவில் இருக்கிற client தண்ணி காட்டுரான்,.. ஒண்ணும் தெரியல்ல,..).
  • சுறாமீன்கள் ஒரு வருடத்தில் 6000 பற்களை இழக்கின்றன. ஆனால் பற்கள் 24 மணி நேரத்தில் வளர்ந்து விடுகின்றன. (டெய்லி கொத்து கொத்தாய் முடி கொட்டுகிறது,.. எங்கே வளர்கிறது??? நிலத்தின் பரப்பு சுருங்குவது போல முடியின் பரப்பும் சுருங்கி கண்டே போகிறது,..கொஞ்ச நாளில் நிலவை உன் முகத்தில் பார்த்தேன்னு பாடிய அதே காதலி, சூரியனை உன் தலையில் பார்த்தேன்னு பாட ஆரம்பித்து விடுவாள்),..

சுவாரஸ்யங்கள் தொடரும்,..