வியாழன், 31 டிசம்பர், 2009

த்த்த்த்த்த்தூ,...

  1. உங்களில் எத்தனை பேர் குரானையும், பகவத்கீதையும் முழுமையாக படித்திருக்கீர்கள்? முழுமையாக படிக்காத, அறியாத ஒன்றைப்பற்றி பேச,எழுத நமக்கு என்ன யோக்யதை இருக்கிறது?
  2. நமக்கு நம் அப்பாவை தெரியும்,தாத்தாவை தெரியும், கொள்ளுத்தாத்தவை தெரியும் இல்லை அதிகபட்சம் கொள்ளுத்தாத்தவின் கொள்ளுத்தாத்தாவை தெரியும். ஒரு நூற்றாண்டு கால மூதையாரின் சரித்திரம் மட்டுமே தெரியும். அதற்கு முன்? நம் மூதையாரின் சரித்திரமே நமக்கு சரியாக தெரியாது. எப்போதோ தோன்றிய பகவத்கீதையையும், எங்கேயோ தோன்றிய குரானையும் என்ன முழுசாக தெரியும்? இல்லை தெரிந்தால்தான் அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கப்போகிறது? இங்கே பிள்ளையார் பிரம்மச்சாரி, வடக்கே ரெண்டு பெண்டாட்டிகாரர். நாம் தினமும் வணங்கும் சாமியிலியே இத்தனை முரண்பாடுகள். எங்கோ யாரால் எப்போதோ எழுதப்பட்ட பகவத்கீதையிலும், குரானிலும் எந்த அளவிற்கு உண்மை தொடர்ந்து வந்து இருக்கப்போகிறது?
  3. இந்து, இந்து என கூச்சலிடும் கூட்டம் திருச்சி லால்குடியில் இரு தலித்கள் தங்கள் மலத்தை மாற்றி மாற்றி தின்ன வேண்டும் என பஞ்சாயத்து சொன்ன போது எங்கே போயின? (ஆதாரம் : டைம்ஸ் ஆப் இந்தியா). சரி விடுங்கள், தாங்கள் ஒதுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர்கள், சிறுபான்மையினரின் சொந்தக்காரர்கள் இங்கே உருகி கொண்டிருக்கிற கம்னியூஷ்டகள் எங்கே போயின?
  4. 1925 ஆண்டு வரை கல்கத்தா டெல்லிக்கு அடுத்த மிகமுக்கிய நகரம். ஆனால் இன்றைக்கு?? எந்த கம்பேனி அங்கே வருகிறது? என்ன தொழில் வளர்ச்சி அங்கே இருக்கிறது? சிங்கூர் கலவரத்தில் எத்தனை விவசாயிகள் கொல்லப்பட்டனர்? 40 ஆண்டுகாலம், முழுக்க முழுக்க தங்கள் ஆட்சியில் ஒரு மண்ணங்கட்டியையும் வைக்காத, ஒரு மானிலத்திற்கு எந்த முன்னேற்றத்தையும் தராத இந்த கம்னியூஷ்டகள் நாட்டின் வளர்ச்சி பற்றி, பாதுகாப்பு பற்றி, மக்களின் வாழ்க்கைதரம் பற்றி பேச என்ன துப்பு இருக்கிறது?
  5. இங்கே மற்ற மதத்தினற்கு அளிக்கும் சுதந்திரம், பேச்சுரிமை மற்ற நாடுகளில் இருக்கிறதா? இல்லை, முஸ்லீம் நாடுகளில் வேலை பார்க்கும் நம் முஸ்லீம் சகோதரர்களை சமமாக, அவரும் நம்ம இனம் என்ற பாவிக்கிற எண்ணமாவது வெளினாட்டு இஸ்லாமிர்களுக்கு இருக்கிறதா? இல்லவே இல்லை. அவர்களை பொறுத்தவரை, இவன் இந்தியன், பாகிஸ்தான், பங்களாதேஷ் என்றுதான் பிரிக்கிறார்கள். இது ஏன் நம்மவர்களுக்கு புரியவில்லை?
  6. ஏர்வாடியில் மனம் குன்றியவர்கள் தீயுடன் எரிக்கப்பட்டபோது வராத போபம், பச்சிளங்குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் எரிக்கப்பட்ட போது வராத கோபம், மகாமகத்தில் குவியல் குவியலாக செத்தபோது வராத போபம், அமைச்சர் 50000ஆயிரம் கோடி அமுக்கியபோது வராத கோபம், பக்கத்து தேசத்தில் மக்கள் செத்து குவியல் குவியலாக புதைக்கப்பட்டபோது வராத போபம், ஒத்த ஜீன் கள் கம்பிகளுக்குள் கற்பழிக்கப்பட்டபோது வராத போபம், சோறில்லாத ஜன நாயக நாட்டின் மானில ஆளுனர் 87 வயது சல்லாபத்தில் வராத கோபம்,தண்டமாய்ப் போன வேட்டைகாரனுக்கும், பாலாய்போன நற்குடிக்கும், ஒண்ணுமில்லா திருனீருக்கும் வந்து தொலைக்கிறது,...


த்த்த்த்த்த்தூ,... வானத்தை நோக்கிதான் உமிழ வேண்டி இருக்கிறது.


.

செவ்வாய், 29 டிசம்பர், 2009

எனக்கு 18 உனக்கு 20

அப்பாடா, ஊருக்கு கிளம்பியாச்சு. ரயிலை சரியா எடுத்திருவான், ஒரு வழியா கிண்டியில் மின்சார ரயிலை புடிச்சு உட்கார்ந்தாச்சு. 6 மாசத்துக்கு அப்புறம் முதல் வருட எக்ஸாம் முடிச்சுட்டு ஊருக்கு கிளம்புறேன். எல்லா எக்ஸாமும் ரொம்பவே கஷ்டம். இத்தனைக்கும் அந்த கெமிஸ்ட்ரி இருக்கே (படிச்சாதானே),.. ராத்திரி முழுக்க கண் முழிச்சு 5-6 புக் புரட்டி பார்த்து நோட்ஸ் எடுத்து, காலைல ஹால்ல போய் உட்கார்ந்தா 20 பிட்டுல ரெண்டுதான் வருது. அந்த பிட்டு எங்கே இருக்குன்னு index பிட்டுல பார்த்து, அதை தேடி எடுத்து, அதை பேப்பர்க்கடியில மறைச்சு வச்சு, பயந்து பயந்து காப்பியடிச்சு ஸ்ஸ்ஸ்ஸ்,.. போதுமடா சாமி கடைசி டைம்ல கஷ்டப்பட்டது. அடுத்த எஃஸாமுக்காவது ஒரு மாசத்துக்கு முன்னாடியே ரெடி பண்ணிரணும்,.. பேப்பர் சேஸ் பண்ண ஒரு சரியான ஆளை,.எக்மோர் வந்துவிட்டிருந்தது.



ம்ம்ம்ம்,.. பார்க்கலாம்,.ஃபிகர் ஏதாச்சும் நம்ம பக்கத்துல உட்காருதான்னு. அந்த "எனக்கு 20 உனக்கு 18" படம் பார்த்ததிலிருந்து மனசுல ஒரு ஆசை, ஒரு ஏக்கம் ரயில்ல நம்ம பக்கத்துல த்ரிஷா மாதிரி யாராச்சும் உட்கார்லேனாலும் பரவாயில்லை. அந்த பட செகண்ட் ஹீரோயின் ஷ்ரேயா மாதிரியாச்சும் ஒரு ஆள் பக்கத்துல உட்காரணும். த்ரிலிங்காக passangers chart பாத்தேன். ஆஆஆஆஆஆஆ,.. ஒண்ணுமே இல்ல,.. என்ன பண்றது,. பக்கத்துல பாத்தா எல்லாம் 35 வயசுல இருக்குற பொம்பளைங்களா இருக்காங்க, ம்ம்ம்ம். முழுசாக பார்த்தேன். 23 வது சீட்டில் வைசாலி, வயது 20, திருச்சி என போட்டிருந்தது,.ம்ம்ம்க்கும் அதுவும் அக்காவா?? சரி,.. நொந்து போய் சீட்டிற்கு போனேன்.



பெரும் அதிர்ச்சி. சும்மா தேவதை மாதிரி தகதகன்னு,. அப்படியே ஷாக்காய்ட்டேன்,. அவள் அழகில் மட்டுமல்ல, என் சீட்டில் வேறு உட்கார்ந்து இருந்தாள். கடவுளே, எனக்கு ஏற்கனவே பொண்ணுங்கள்ட்ட பேச வராது,..(அட நம்புக்கப்பா,...),.. இவள்ட்ட இங்கிலீஸ்ல வேற பேசணும் போல இருக்கே,..ம்ம்ம்ம் யோசித்துக்கொண்டு இருக்கும் போதே
"நீங்க இங்க உட்கார்ந்துக்கிறீங்களா?,. நான் முன்னாடியே இறங்கணும்"
"வேர்,. (அதாம்பா where?)
"jdjsc ncnnclnci ncojcnpjc nicbincn nicnicn oijdnbdvbbzzjcbb znxbcubdc"
"பர்டன்" (burden இல்ல pardon )
"ஸ்ரீ ரங்கம்"
டேய் உனக்கு தேவையா? மனசிற்குள் கோபம் வந்தாலும் அவள் அழகில் அமைதியா போய்ட்டேன்.



ட்ரெய்ன் செங்கல்பட்டை ஒட்டி வந்து கொண்டி இருந்தது. செங்கல்பட்டு ஏரியின் நீர் வாசனையை தூக்கி சாப்பிடுவதுபோல் ஒரு வாசனை. ஆஆஆ,.. ஒரு வெண்ணெய் தயிர் சாதம் சாப்பிடுகிறது! (கவனிக்க ஆச்சர்யகுறி). கூட மசால்வடை வேறு, எனக்கு நல்லா பசியை கிளப்பிவிட்டுறுச்சு. பசியினால் என் கவனம் வெண்ணெயிலிருந்து தயிர்சாதத்திற்கு மாறியதை கவனித்துவிட்டாள் போல,..

"சாப்பிடுறீங்களா???" (கவனிக்க சாப்பிடுங்க இல்ல, சாப்பிடுறீங்களா???)
"இல்ல செங்கல்பட்டில்தான் எப்பவும் சாப்பிடுவேன்,.."( எப்பூடி???)
எழுந்தேன்,.
"எக்ஸ்கிஸ்மீ"
",...."
"இந்த வாட்டர்கேன்ல தண்ணீ புடிச்சு தர்ரீங்களா"
இறங்கி எனக்கு ஒரு புளி சாதம் வாங்கிவிட்டு, அவளிற்கு தண்ணீர் பிடித்துவிட்டு மேலே ஏற வண்டி நகர ஆரம்பித்திருந்தது.
"தாங்க்ஸ்"
இடத்தில் அமர்ந்தேன். பொட்டலத்தை பிரித்தேன். பக்கத்தில் இருந்த மசால் வடையின் வாசத்தில் புளி சாதம் சாப்பிட ஆரம்பித்தேன்.
"என்ன இது, எலுமிச்சை சாதமா?" (அடிப்பாவி, மஞ்சளாயிருக்கிற எல்லாமே எழுமிச்சை சாதமா?)
"இல்ல, புளி சாதம்"
"எவ்ளோ"
"5 ரூபாய்"
"5 ரூபாய்க்கு சாதமெல்லாம் கிடைக்கிதா?" (நற,. நற)
"வடை சாப்பிடுங்க"
"இல்ல இருக்கட்டும்"
"பரவாயில்ல, எப்டி தனியா சாதம் மட்டும் சாப்பிடுவீங்க"
"இல்ல்ல,. இருக்கட்டும்"
"அட சாப்பிடுங்க"
வடையில் பாதி வாயில் போய்விட்டிருந்தது,..


கொஞ்சம் கொஞ்சமாக சம்பாஷணைகள் ஆரம்பித்து விட்டுருந்தன. நிறைய பேசினாள். உண்மையில் அவளிடம் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை. விழுப்புரம் வந்துவிட்டது.

"ஏதும் வேணுமா?"
"எனக்கு ஒரு காபி"
"வேற?
"இல்ல, போதும்"
நான் போய் காபியும், சூடாய் போட்ட மசால்வடையும் வாங்கிவந்தேன்.

"என்ன ஜோதி, நான் சாப்பிடும்போது தந்த வடைக்கு கணக்கு தீர்க்குறீயா?"
"ச்சீ,.. சூடா இருந்துச்சு, அதான் வாங்கிட்டு வந்தேன், வேணாம்னா, பரவாயில்ல, நானே சாப்பிட்டுறேன்"
"அடப்பாவி, ஒரு பேச்சுக்கு சொன்னா நீயே அமுக்குறீயா, கொண்டா"

எங்கள் பேச்சுக்களை, செயல்களை பக்கத்தில் இருப்பவர்கள் கவனிப்பது நன்றாக தெரிந்தது. இருந்தாலும் அது தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. தொணதொணவென் அவள் பேசும் அழகு, அவளின் அழகை விட எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.
ஆனால் அவள் அப்படி, இப்படி நகரவேயில்லை. நகை ஏதாச்சும் வெச்சுருப்பாளோ??
பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன,..

"நீ யாரையாச்சும் லவ் பண்ணியிருக்கியா"
"ச்சீ,இல்ல"
"என்னை ராக்கிங்க்ல, இந்த கேள்விதான் கேட்டாங்க"
"ம்ம்"
"ஆனா, பக்கத்துல இருக்கிறவன் இவளயெல்லாம் எவன் லவ் பண்ணுவான்னு வெறுப்பேத்தி அனுப்பி விட்டுட்டான்,.. வெறுப்பாகி அதிலிருந்து எனக்கு அந்த எண்ணமே வர்ரதில்ல"
"ஏன்"
"உனக்கு புரியாது, வேணாம், வேற ஏதாச்சும் பேசு"
பேச்சுக்கள் போய்க்கொண்டே இருந்தன. .

பக்கத்தின் இருப்பவர்களின் காதுகள் எங்களையே கவனிப்பது நன் கு தெரிந்தது. அவள் கண் மூட ஆரம்பித்தாள். நான் அவள் அழகை ரசிக்க ஆரம்பித்தேன். காற்றின் விசையில் அவள் கூந்தல் என் மீது வீசிக்கொண்டு இருந்தது. நான் அவளிடம் சரணடைந்து கொண்டிருந்தேன் என்பது மட்டும் நன்றாக தெரிந்தது.



"ஸ்ரீ ரங்கம் வந்திருச்சு"
"ம்ம்ம்ம்"
"வண்டி நிக்கட்டும்"
"என் பேக்கை எடுத்து பிளாட்பாரத்துல தர்ரியா"
"ம்ம்ம்ம். சரி"
எழுந்தாள். ஒரு மாதிரி சாய்ந்தாள்,.முட்டியில் கைவைத்தாள்,..
ஒண்ணும் புரியவில்லை,. சில நொடிகளில்,..
"கடவுளே, இவள் ஊனமா?" எனக்கு நெஞ்சடைத்துவிட்டது. சுதாரித்து விட்டு ப்ளாட்பாரத்தில் பேகை கொடுத்தேன்.அவளிடம் சின்ன புன்முறுவல் கூட இல்லை.

"bye"

மெலே ஏறி ஜன்னலோரம் உட்கார்ந்தேன்.

சூரியன் சாய ஆரம்பித்துவிட்டான். காவிரி ஆறு வற்றிவிட்டிருந்தது.


வெள்ளி, 25 டிசம்பர், 2009

எலி வாந்தி எடுக்காது. யானை ஜம்ப் பண்ணாது - II

சில நேரங்களில் இயற்கை சுவாரஸ்யமான பல தகவல்களை நமக்கு விட்டு செல்கிறது. இதே போல ஒரு பதிவை நாம் ஏற்கனவே பார்த்தாச்சு. இது இரண்டாம் பகுதி


டால்பின்கள் ஒரு கண்ணை திறந்து கொண்டே தூங்கும்.(நான் ஒரு வாயை திறந்துகொண்டே தூங்குவது வழக்கம்)

நிலத்தில் மைல் என்பது 6080 அடி. கடல் நீரில் (நாட்டிகள் மைல்) 6280 அடி. (மைலும்,அடியுமே குழப்பம், இதில் இன்னும் வேற,..)


ஜெல்லி மீன்களில் 95% தண்ணீர். தோராயமாக ஒரு மனிதனின் உடலில் 66% பங்கு நீர். (நமக்கு தெரிந்த ஒரே தண்ணி,..வுவாக்க்க்க்க் தண்ணி,..)

போலார் கரடிகள் இடதுகை பழக்கமானவை.(இடது கைகள் ஆட்களை பார்த்திருக்கேன் ஆனால் போலார் கரடிகளை பார்த்தது இல்லை,நீங்க யாராவது??)

நத்தைகள் தொடர்ந்து முன்று வருடம் தூங்ககூடும். எறும்புகள் சுத்தமாக தூங்குவதில்லை. (எங்க ஆபீஸ்ல எறும்பு மாதிரி வேல பாக்க சொல்றாய்ங்க, ஆனா எனக்கு நத்தை மாதிரி இருக்க ஆசை,..)

ஹம்மிங்க் பறவைகள் என்ற ஒரே பறவையினம் மட்டுமே பின்னோக்கி பறக்கும். கங்காரு மட்டும் பின்னோக்கி நடக்க முடியாது.(காரணம் எனக்கு தெரியும் கங்காருக்கு முன்னோக்கி வைத்த காலை பின்னோக்கி வைக்க பிடிக்காது)

கையின் முட்டிகளை நாக்கால் தொடுவது நடக்காது ஆனால் ஒரு சிலர் இதிலும் வெற்றி பெற்று உள்ளனர்.(என் பையன் நாக்கால் மூக்கை தொடுவான்)



கண்களை திறந்துகொண்டே தும்முவது என்பது நடக்காத காரியம். (தும்மிக்கொண்டே கண்களை திறக்க முடியுமா??? ம்ம்ம்,.இப்படியெல்லாம் யோசிக்க கூடாது, மூளை வேஸ்டாகுதுல்ல??)

லட்சக்கணக்கான மரங்கள் அணிலால் நடப்படுகின்றன. பழங்களை, விதைகளை அவசரத்தில் புதைத்துவிட்டு பின் மறந்துவிடுவது அவைகளின் வழக்கம். (லட்சக்கணக்கான மரங்கள் அரசாங்கத்தால் வெட்டப்படுகின்றன. மரங்களை அவசரத்தில் வெட்டிவிட்டு பின் வெட்டப்பட்ட மரங்களை மறந்துவிடுவது அவர்களின் வழக்கம்)

போரில் இறந்த ராணுவ அதிகரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது ஜப்பானின் வழக்கம்.(1956ல செத்தஅம்பேத்காருக்கு 1990ல நாம் கொடுக்குற பாரத ரத்னா மாதிரி இல்லாம இருக்கணும் ,..)

டெலிபோனை கண்டுபிடித்த கிரகாம்பெல் மனைவிக்கோ, மாமியாருக்கோ போன் பண்ணியதில்லை. காரணம் அவர்கள் காதுகேளாதவர்கள்.(ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடி பெண்கள் இருக்கிறார்கள் என்பதற்கான வரலாற்று ஆதாரம்)

பூமியின் சுழலும் வேகம் குறைவதால் இன்னும் மில்லியன் ஆண்டுகளில் லீப் வருடம் இருக்காது. (எல்லாம் சரி. பூமி இருக்குமா??? நல்லா பண்றாய்ங்க ஆராய்ச்சி,..)

நன்றி: http://didyouknow.org/fastfacts/

சுவாரஸ்யங்கள் தொடரும்,..

ok,.. இவ்ளோதூரம் வந்து படிச்சாச்சு, அப்டியே தமிழீஸ்ல ஒரு ஓட்டை போட்டு போங்க,..




.

வெள்ளி, 18 டிசம்பர், 2009

ரஜினி vs விஜய்



விஜய் மற்றும் ரஜினியை ஒப்பிடலாமா? இது முறையான அளவு கோலாகுமா? என எனக்கு ஒரு கேள்வி தொக்கி நிற்கிறது. ஆனால் ஏழு முக்கியமான அளவுகோலில் ஒப்பிட்டு பார்க்கலாம்.



ஒற்றுமைகள்

1.இருவருக்குமே பெரிய பெர்சானாலிட்டி கிடையாது.
2.ரஜினி சினிமாவில் நுழைந்து ஒரு பத்து வருடம் கழித்து பார்க்கையில் அவருக்கு இருந்த ரசிகர்களின் எண்ணிக்கையில் குழந்தைகள் என சில குறிப்பிடும் அளவு பங்கு உண்டு. விஜய்க்கும் அப்படியே.
3.இருவருக்கும் சில தனித்திறமைகள் உண்டு. ரஜினிக்கு ஸ்டைல். விஜய்க்கு டான்ஸ்.
4. இருவருமே ரிமேக் படங்களில் ஆர்வம் காட்டினார்கள். ரஜினி ஹிந்தி. விஜய் தெலுங்கு.
5.இருவருமே காதல் திருமணம்.
6.இருவருமே அழுகைகாட்சிகளில் ரசிகர்களை அழ வைப்பவர்கள் (இவர்கள் அழும் கொடுமையை பார்க்க முடியாமல்தான். இருவருமே கண்ணை மூடிக்கொண்டு விரலால் கசக்குவார்கள்).
7. நகைச்சுவை இருவருக்குமே நன்றாக வரும். ரஜினி அதில் பல மடங்கு மேல்.

வேற்றுமைகள்

1.ரஜினிக்கு அன்மீகம் பிடிக்கும். விஜய்க்கு அரசியல்.
2.ரஜினி தன் உழைப்பில் மேலே வந்தவர். விஜய் தந்தை உழைப்பில்.
3.விஜய் நல்ல பாடகர், உதாரணம் காதலுக்கு மரியாதையில் வரும் "எனது விழி" . ரஜினியின் குற்ற்ல் அனுபவம் மன்னனின் வழியாக எல்லாருக்கும் கிடைத்திருக்கும்.
4.ரஜினிக்கு ரசிகர் கூட்டம் உருவானது. விஜய்க்கு உருவாக்கப்பட்டது.
5.ரஜினி இயக்குனரின் சொல்பிள்ளை. ஆனால் இயக்குனர்கள் விஜயின் சொல்பிள்ளை.
6.ரஜினி தமிழின் சிறந்த இயக்குனர்கள் அனைவரின் படத்திலும் நடித்துவிட்டார். விஜய் சிறந்த இயக்குனர்கள் அனைவரின் படத்தையும் பார்த்துவிட்டார்.
7.விஜய்க்கு சினிமாத்துறை மிக பிடிக்கும். சினிமாத்துறைக்கு ரஜினியை ரொம்ப பிடிக்கும் (அப்படிதான் நினைக்கிறேன்).
8.ரஜினி பேச்சில் அனல் பறக்கும், நிஜத்தில் குழப்புவார் (அரசியல் வருவாரா மாட்டாரா). விஜய் பேச்சில் தூசு மட்டுமே பறக்கும் (அசினும், விஜயும் தந்த அந்த பேட்டியை பாத்தீங்களா??). நிஜத்தில் தெளிவாக இருப்பார் (அரசியல் கண்டிப்பாக உண்டு, அடுத்த முதல்வருக்கு உதய நிதிக்கு இவர்தான் போட்டி),..

(அய்யோ இந்த டைம் பாத்து போட்டுட்டேன். எத்தனை ஆட்டோ ப்ளேன்ல வருதுன்னு தெர்லயே,..)

வெள்ளி, 11 டிசம்பர், 2009

என் கேள்விக்கு என்ன பதில்?


  1. எனக்கு மட்டும் அல்ல, இங்கு தமிழ் படிக்கும் அனைவருக்கும் திருக்குறளைப் பிடிக்கும். ஆனால் திருவள்ளுவர் எழுதிய அந்த திருக்குறள் எங்கு இருக்கிறது? யாரிடம் இருக்கிறது. எவருக்காவது தெரியுமா? சொல்லுங்களேன்.
  2. தமிழ் நாட்டில் சில ஆறுகள் ஓடுகின்றன. அதில் பலவற்றில் தண்ணீர் இல்லை. (இதில் கூவத்தை கணக்கில் சேர்க்காதீர்கள்). அதில் வைகையும் உண்டு. எனக்கு தெரிந்து மதுரையில் வெள்ளம் என ஒரே ஒரு முறை கேள்விப்பட்டு இருக்கிறேன். இந்த வைகை கடலில் கலக்காது என எல்லோருக்கும் தெரிந்த தகவல்.வைகை ஆறு என்பது இருப்பது உண்மை. ஆனால் எங்கே அது காலி ஆகிறது? அதாவது முற்று பெறுகிறது?
  3. எனக்கு தெரிந்து பழந்தமிழர்கள் இயற்கை மட்டுமே வணங்கி வந்து இருக்கிறார்கள். இப்போதும் எங்கள் கிராமத்தில் பொங்கலின்போது காட்டையும், மாட்டையும் சுத்தப்படுத்தி மண்ணை வைத்து கும்பிடுவதுதான் வழக்கம். எனக்கு தெரிந்தவரை என் பல கிராமத்து நண்பர்களின் வீடுகளிலும் இதுதான் நடக்கிறது. ஆனால்,.. (ம்ம்ம் கேள்வி வந்துவிட்டது?) எப்போது நம் இயற்கை பஞ்சபூதங்கள் பஞ்சரானது?? நாம் மண்ணாய் வணங்கும் பூமி திருமாலிற்கு ரெண்டாம்தாரமானாள். ஆற்றையும் சிவனிற்கு ரெண்டாம்தாராமாக்கி கொண்டையில் உட்காரவைத்தார்கள். வாயு, ஆகாயம் எல்லோரையும் மூன்றாம்தர கடவுள் ஆக்கினர். நம் மூதையாரை அசுரர் ஆக்கினார்கள். இதை செய்தது யார்?? எப்போது நம் இயற்கை பஞ்சபூதங்கள் பஞ்சரானது?? எப்படி?
  4. பொதுவாக எல்லா உயிரினங்களும் நீந்தும் தன்மை கொண்டவை. வண்டு, எலி, பூனை, மாடு, யானை என எல்லா அளவில் உள்ள உயிரினங்களும் நீந்தகூடியவை. ஒரு முறை NGCயில் யானை அடித்த நீச்சலைப் பார்த்து அசந்துவிட்டேன். சின்ன வயதிலேயே எனக்கு இந்த சந்தேகம் இருந்ததால் ஒரு முறை எங்கள் குட்டையில் எங்கள் வீட்டு பூனையை தூக்கிப் போட்டு அது அழகாக நீந்திவரும் காட்சியை கண்டு ரசித்து(????) இருக்கிறேன். ஏன் பாலாய் போன ஆறறிவு ஜீவன் மட்டும் ஆற்றில் தவறி விழுந்து சாகிறது. மனித உயிரினம் நீச்சலை தொலைத்தது எப்போது?




  5. ஆற்றலை ஆக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. ஒரு வகையில் இருக்கிற ஆற்றல் இன்னொரு வகையில் மாறுகிறது. ரொம்ப சரி. ஆனால் காலங்காலமாக பூமிக்கு வரும் சூரியனிடம் இருந்து வரும் ஆற்றல் என்னவாகிறது?? அது எங்கே தொலைகிறது.?
இப்போதைக்கு இது போதும். பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டம் போடுங்கள். பதில் தெரியாதவர்கள் ஓட்டையாவது போடுங்கள் (என்னாத்துக்குன்னு குண்டக்க மண்டக்க கேள்வி கேக்க கூடாது)

வெள்ளி, 4 டிசம்பர், 2009

25 ஆண்டுகள் (டிசம்பர் 03, 1984) - போபால்

நேற்றுடன் 25 ஆண்டுகள் ஓடிவிட்டன...

நம் அரசாங்கத்திற்கு 3.3 பில்லியன் டாலர் நோக்கம்

அந்த நிறுவனத்திற்கு 457 மில்லியன் டாலர் கொடுக்கவேண்டிய கவலை,..

பத்திரிக்கைகளுக்கு மென்ன தீனி

தொழிற்சாலைகளுக்கு நல்ல பாடம் (lessons learned என வர்ணிப்பார்கள்)

ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நடந்தது என்ன?? (root cause)

நமக்கு??,.. போனது உயிர்,.. இந்த இந்தியாவே இப்படிதான்,..

போன உயிர்களுக்கும் அங்கே பிறந்த தினம் முதல் நோயால் சாகாமல்
செத்துக்கொண்டிருக்கும் அந்த போபால் மக்களுக்கு??







ஆம், கேட்பதற்கு நாதியில்லை.

------------------------------------------------------------------------------

1984, Dec 2 :
இரவு மணி 09:00 - குழாய்களை நீரால் சுத்தப்படுத்தும் பணி ஆரம்பிக்கிறது
இரவு மணி 10:00 - வினைகலனில் நீர் உட் புகுந்து அதிவேக வினையாக மாற்றமாகிறது.
இரவு மணி 10:30 - அதிக நச்சு வாயுக்கள் அவசர வெளியேற்றியின் வழி வெளியேறுகிறது
இரவு மணி 10:30- வெளியே மக்களுக்கு இருமல், கண் எரிச்சல், வாந்தி துவக்கம்
Dec 3:
இரவு மணி 00:30 - மிக நீண்ட அபாய சங்கு ஊதி, பின் அணைக்கப்படுகிறது.ஆலைக்குள் மட்டும்
இரவு 1:00 போலீஸ் எச்சரிக்கை ஆனது, மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். யூனியன் கார்பைடு நிறுவனம் நச்சுக்கசிவை மறுக்கிறது.
இரவு 2:00 வெளியே மருத்துவமனையில் மக்களுக்கு பார்வை மந்தமடைவதும், வாந்தியும், முச்சு திணறலும் அதிகரிக்கிறது
இரவு மணி 2:10 - மிக நீண்ட அபாய சங்கு ஊதி, பின் அணைக்கப்படுகிறது. ஆலைக்கு வெளியே,.
இரவு மணி 4:00 - வாயுக்கள் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது
காலை 6:00 - "அனைத்தும் சுமூகமாக உள்ளது" மக்களுக்கு அரசாங்கம் அறிவிப்பு







டிசம்பர் 3 காலை 6:00 மணியுடன் அனைத்தும் சுமூகமாய் முடிந்துவிட்டதா??



-----------------------------------------------------------------------------------

இன்று போபாலை பற்றி நிறைய ஆராய்ச்சிக்கட்டுரை வந்து விட்டன.

ஏன் நடந்தது

எப்படி தடுத்து இருக்கலாம்??

யார் காரணி?

விபத்திற்கு முன் என்ன என்ன விபத்துக்கள் நடந்தன? எப்படி?

அடுத்தது என்ன நடக்கலாம் (போபால் மக்களுக்கும், யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கும்)??

இப்போது போபால்,.. இப்போது யூனியன் கார்பைடு நிறுவனம்,...

dow நிறுவனம் போபாலை வாங்கியதன் பின்னணி. IIT மாணவர்கள் dow நிறுவனத்தில் வேலையை தூக்கி எறிவது ஏன்?

இப்படி நிறைய,..

ஆனால் போபால் நகர குடும்பங்கள் வாங்கிய அடியில் எலும்புகள் மிச்சமிருக்கிறதா??

எத்தனை முறை பாடம் படித்தாலும், எத்தனை முறை செருப்பால் அடிவாங்கியும் நமக்கு ஏன் புத்திவரவில்லை?? (மகாமகம் 200 பேர், திருச்சியில் கல்யாண மண்டபத்தில் 50 பேர் பலி, கட்டிவைக்கப்பட்ட மன நல நோயாளிகள் அப்படியே எரிந்து இறந்த கொடூரம், கும்பகோணம் பள்ளி குழந்தைகள் வெளியே வரமுடியாமல் எரிந்த கொடுமை, நேற்று கூட ஆசிரியையுடன் குழந்தைகள் கொத்தாக சாவு,. பெத்த மனசு எப்படி துடிதுடித்திருக்கும்?)

எதையுமே சாதாரணமாய் எடுத்துக்கொள்வது சரியா.? தனிமனிதனுக்கு சரியாக இருக்கலாம், ஆனால் சமுதாயத்திற்கு?
------------------------------------------------------------------------------

போபால் நமக்கு சொல்லும் பாடம் என்ன??

பாதுகாப்பை பாதுகாப்பதே பாதுகாப்பு.

ஆம்,..

சில நொடிகளுக்கு அவசரப்பட்டு பேருந்துக்கடியில் சக்கரத்திற்கு அடியில் கிடக்கும் மாணவனின் பெற்றோரை நினைக்கையில்,..

வருங்கால கணவருடன் பேசிக்கொண்டு ரயிலில் அடிபடும் பெண்ணிற்காக, வருங்காலகணவனின் உள்ளத்தில் ஓடும் அந்த குற்ற உணர்ச்சிகளை கேட்கையில்,...

எச்சரிக்கையாக இருக்க வேண்டியது எவ்வளவு அவசியம்.????

25 ஆண்டுகளாகியும் தன் சந்ததி மனவளர்ச்சி குன்றி சுத்துவதைப் பார்த்தால் எந்த ஆன்மா சாந்தியடையும்??. முடிந்தால் 25 வருடம் அந்த ஊமையாகி போய்விட்ட ஆன்மாக்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.



----------------------------------------------------------------------------

செவ்வாய், 24 நவம்பர், 2009

வேர்களை தேடி


காலில் வேர்களை விதைத்து
நெஞ்சில் விழுதுகளை நிறைத்து
கண்ணில் கிளைகளை பரப்பி
வெகு தூரம் போய்விட்டாள்.
என்னைவிட்டு,.
அதனால் என்ன?
கண்கள் குளமாகவில்லை.
நெஞ்சம் ரணமாகவில்லை
ஆனால் கால்கள் மட்டும்
அந்த தொலைந்துவிட்ட செருப்பில்
சில அறுந்த வார்களை தேடி,...

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

நரிக்குறத்தியும் பார்க் ஷெரட்டனும்


அது சென்னையின் மிக சிறந்த ஸ்டார் ஓட்டல்களில் ஒன்று. "சுற்றுப்புறங்களில் நிறுவனங்களின் பங்கு" என்ற தலைப்பில் தொழில் கூட்டமைப்புகளின் சார்பில் நடந்த கருத்தரங்கம் பங்கேற்பிற்காக சென்றிருந்தேன். சிறப்பாக நடந்த கொண்டிருந்த போது ஒரு நிறுவனத்தின் சார்பில் பேச வந்த அந்த பெண்மணிக்கு 35 வயதை ஒட்டி இருக்கும். சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்த அந்த பெண் ஒரு லட்சம் வண்ணம் பொதிந்த ஜோதிகா பட்டுப்புடவையில் பேச்சை ஆரமித்தார். அட்டகாசமான ஆங்கில உச்சரிப்புகளும், முறைப்படுத்தப்பட்ட புள்ளி விவரங்களும், சிறப்பாக வடிமைக்கப்பட்ட pptயும் அவரை ஸ்டார் பேச்சாளர் என அனைவரும் சொல்லியதில் தவறே இல்லை என எனக்கு உணர்த்தியது. கேள்வி நேரத்திற்கு முன் தேனீர் இடைவேளை வந்ததால் எல்லோரும் வெளியில் உள்ள அறைக்கு வந்தோம். தேனீர் பருகிக்கொண்டே கீழே சாலையை பார்த்த போது, நம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் ஒரு நிகழ்வு நடந்தேறிக் கொண்டு இருந்தது.




அது ஒரு குப்பை மேடு. அதன் அருகில் குருவிக்காரி என சென்னை மக்களாலும், குறத்தி என இதர பகுதிகளிலும் அழைக்கப்படும் ஒரு பெண்ணும் அவள் குடும்பமும் சேர்ந்து குப்பையில் பொறுக்கி கொண்டிருந்தார்கள் (தட்டச்சு செய்யும் போதே இந்த வார்த்தையை அடிக்க மனசு வலிக்கிறது, பார்க்கும் போது அது ஏனோ இல்லை. கண்கள் பார்த்து பழகிகொண்டு விட்டது, ஆனால் விரல்களுக்கு இது புதிது ). அவள் கையில் ஒரு கூர்மையான நீளமான கம்பி. அவள் அதை பயன்படுத்தி அங்கே இருந்த பிளாஸ்டிக் பைகளை குத்தி மேலே இழுத்து தன் தோளில் இருந்த பெரிய கோணிப்பையில் போட்டுக்கொண்டாள். அவள் இடுப்பில் சிறிய தொட்டி போன்ற வடிவமைப்பில் உள்ள துணியில் ஒரு பச்சிளம் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அருகில் அவள் கணவன் கையிலும் அதே மாதிரி நீளமான கம்பி, ஆனால் கம்பியின் முனை கூர்மையாக இல்லை. அதில் காந்ததை மாட்டி இருந்தான். அதை வைத்து கம்பி, இரும்பாலான மூடிகள் போன்ற பொருட்களை சேர்த்து தன் பையில் போட்டுக்கொண்டிருந்தான். அவன் தோள்பட்டைக்கு மேலே ஒரு குழந்தை உட்கார்ந்து இருந்தது. மூக்கு ஒழுகும் போல இருக்கிறது. மூக்கை தேய்த்துக்கொண்டிருந்தாள். எனக்கு இந்த காட்சி சில கேள்விகளை எழுப்பியது.



அடுக்களையில் இருந்த பெண்கள் சிறப்பாக சமூதாயத்திற்கு தங்கள் பங்கை உயர்த்தி வரும் வேளையில் இந்த குறவர் சமுதாயம் மட்டும் அப்படியே இருக்க என்ன காரணம்.? அவர்களின் சுய கட்டுப்பாடுகளா இல்லை சமூதாய திணிப்பா??






குழந்தை கருத்தரித்த நாளில் இருந்து குழந்தை பிறக்கும் வரை மருத்துவ ஆலோசனை பெற்றும் கடைசியில் சிசேரியன் ஆகும் பெண்களுக்கும், மருத்துவமனை பக்கமே போகாமல் சுக பிரசவம் ஆகும் குறத்தி பெண்களுக்கும் உடல் ரீதியாக அப்படி என்ன வித்தியாசம்?





குற்றால குறவஞ்சி இலக்கியம் உண்டு, குறவன் பாத்திரம் நடிக்காத பிரபல நடிகர் இல்லை, குறவன் வேஷம் இல்லாத மாறுவேடப்போட்டி இல்லை,.. இப்படி பல விதங்களில் சமூதாயத்தின் பரிணாமங்களில் இருக்கும் இந்த கூட்டம் உண்மையில் மற்ற எல்லா மக்களிடமிருந்து தனித்து நிற்பது ஏன்?



சொந்தமாக வீடில்லை, நடைபாதைதான். அன்றைய நாள் இரவு உணவிற்கு காலையில் உறுதியளிக்க முடியாது, இரண்டு துணிக்கு மேலிருந்தால் அதிகம், இரண்டு குழந்தைகளுக்கு கீழிருந்தால் ஆச்சர்யம். காலைக்கடனை முடிக்க கஷ்டம், பொது இடத்தில் மற்றவர் பார்க்க குளிக்கும் துர்பாக்கியம், பசித்த குழந்தைக்கு பாலில்லாமல் தண்ணீர் ஊற்றும் கொடுமை,. இவ்வளவு பிரச்சனைகளிலும் இவர்களுக்கு 9 மணிக்கெல்லாம் தூக்கம் வருகிறது (படுத்தவுடன்) 5 மணிக்கெல்லாம் முழிப்பு வருகிறது. ஹாயாக சிறிது ஒயின் அருந்தி தூக்கம் வரவழைக்க முயற்சி செய்து புரண்டு படுக்கும் கூட்டத்திற்கும், படுத்தவுடன் தூங்கும் இந்த கூட்டத்திற்கும் உடல்ரீதியாக அப்படி என்னதான் வித்தியாசம்?






உண்மையாக சுற்று சூழலை காப்பவர் யார்? 1 லட்சம் வண்ணம் பொதிப்பதற்காக பல்வேறு சாயங்களை உருவாக்கி ஆறையும், ஊரையும் அசுப்படுத்தும் சாயத்தின் விளைவை தெரிந்தே அதை அணிந்து கொண்டு நுனி நாக்கில் பிளந்து கட்டும் அந்த பெண்ணா, இல்லை தன்னை அறியாமலேயே சுற்று சூழலை சுத்தம் செய்து பாதுகாக்கும் அந்த குறத்தியா?? இந்த கேள்விதான் எனக்கு கருத்தரங்கில் கேட்க வேண்டிய கேள்வியாக தோன்றியது. ஆனால் யாரிடம் கேட்பது என்றுதான் தெரியவில்லை.

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

ஷில்பாவிற்கு முத்தம் கொடுத்த தாத்தா,..

இதற்கு தனியே விளக்கம் கிடையாது,.











o
o
o
o
o
o
o
o
o
o
o
o
o
o
o
o
o
o








புகைச்சிலில் ஓட்டை மறந்து விடாதீர்கள்,...





.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

நண்பர் தின வாழ்த்துகள்.

என்னை நண்பராய் ஏற்றுக் கொண்டு எனக்கு இந்த பரிசை வழங்கிய நண்பர் குறை ஒன்றும் இல்லைக்கு என் மனமார்ந்த நன்றிகள். முதலிலேயே சொல்லி இருக்க வேண்டும்,.. இந்த நாளிற்காக காத்திருந்தேன்





------------------------------------------------------------------------


என் குடும்பம் என்னுடன் இல்லாத போது
எனக்கு ஒரு குடும்பமாய்
அதே அன்பை, அதே சகோதரத்துவத்தை தந்து
எழுது எழுது இன்னும் எழுது என உற்சாகப்படுத்தும்
நண்பர் பதிவு குடும்பம் எனக்கு பிடித்துதான் இருக்கிறது

மச்சி காசு இருக்காடா என தர்மசங்கடத்தை தராமல்
உரிமையை எடுத்துக் கொண்டு எங்கிருந்தோ
முகமறியா சக நண்பருக்கு உதவும்
இந்த பாசக்கார பயபுள்ளக் கூட்டம்
எனக்கு பிடித்துதான் இருக்கிறது

இன்னைக்கு கண்டிப்பா டிரீட் தர்ணும்டா
என பாரில் ஐநூறு ரூபாய் வருமான உயர்வுக்கு
ஆயிரம் ரூபாய் மொய் என பர்ஸை கவுக்காமல்,
நடேசன் தெருவில் அற்புதமான நட்பை பகிரும்
இந்த நண்பர் கூட்டம் எனக்கு பிடித்துதான் இருக்கிறது,

என் எண்ணங்களை காது கொடுத்து கேட்கும்
என் கோபங்களை சாந்தப்படுத்தும்
என் அறிவை செம்மைபடுத்தும்
என் தவறுகளை சுட்டிக்காட்டும் இந்த
நக்கீரர் பரம்பரை எனக்கு பிடித்துதான் இருக்கிறது

என் சிரிப்பை எதிரொலித்து
என் அழுகையை துடைத்துவிட்டு
என் கவலையை தூக்கியெறிந்து
என் தனிமைக்கு மருந்தளித்து
என் அன்பை ஏற்றுகொண்டு

என் வேதனையை கேட்டுக்கொண்டு
என் பார்வைகளை புரிந்து கொண்டு
என் இந்த மொக்கையை பொறுத்துகொண்டு (சிரிப்பிற்கு நன்றி)
ஆலமரமாய் இந்த சிறிய பறவைக்கு இளைப்பாறுதல் தரும்
இந்த பதிவர் கூட்டம் எனக்கு பிடித்துதான் இருக்கிறது.

-------------------------------------------------------------------------

அனைவருக்கும் என் நண்பர் தின வாழ்த்துகள்.

கவிதை எழுத ஆரம்பிச்சு அது கடைசியில் கவுஜவாக மாறிவிட்டது,..
இந்த கோபத்தில் ஓட்டளிக்க மறந்துவிடாதீர்கள்.



.

வெள்ளி, 31 ஜூலை, 2009

ஐ லவ் யூ

லவ் யூ அவ்வளவு சாதாரணமானதாக எனக்கு தெரியவில்லை. அதுவரை பேசாத பெண்ணாகட்டும், இல்லை பழகிய தோழியாகட்டும் சொல்வதற்கு முன் லப் டப்புகள் எங்கோ போய்விடும். ஒப்புக் கொள்வாளோ, தப்பாய் எடுத்துக் கொள்வாளோ என்று நிறைய காதல்கள் சொல்லாமலேயே முடிந்திருக்கின்றன. ஓரினச்சேர்க்கையே சரி என்று சொல்லும் இன்றைய சூழ்னிலையில் காதலித்தால் தப்பில்லை என்றே சொல்வேன். ஏனென்றால் இப்போதைக்கு யாரையும் நம்ப முடியவில்லை. காதலரை/காதலியை தெரிந்து,அறிந்து கல்யாணம் செய்வது ஒன்றும் எனக்கு தப்பாக தெரிய வில்லை. எல்லோரும் அதை வாழ்வில் ஒருவரிடம் சொல்லி அந்த த்ரில்லிங்கை அனுபவிப்பதில் தவறில்லை. ப்பா,.. மறக்க முடியாத தருணங்கள். முதன் முதலில் காதலியிடம் சொல்வதாகட்டும் இல்லை காலம் முழுக்க வரும் மனைவியாகட்டும் முதன் முதலில் அதை சொல்லும் போது அது கண்டிப்பாக த்ரில்லிங்க்தான்,..

இன்று அப்படிப்பட்ட சுவாரஸ்யமான எனக்கு பிடித்த " லவ் யூ"க்கள் உங்களுக்காக,..

அலை பாயுதே

நேர்த்தியாக படமாக்கி இருப்பார் மணிரத்னம்.இந்த கதை நிறைய பேருக்கு பிடிக்காவிட்டாலும் எனக்கென்னவோ பிடித்துதான் இருந்தது. மணி ரத்னத்தின் பவித்ரமான காதல்களில் இதுவும் ஒன்று. மாதவனும், ஷாலினியும் காதலர்களாக போட்டி போட்டு நடித்திருப்பர். எனக்கு பிடித்த லவ் யூக்களில் இது முதன்மையானது. (என்னா songs இல்ல??)




காக்க காக்க
அடுத்து ஆயுசு முழுக்க காதலிக்கவே பிறந்த ஜோடி ஜோதிகா மற்றும் சூர்யா. ஜோதிகாவின் அழகில் ஜோதி மயங்கிருந்த வேளை பார்த்து சூர்யாவிடம் தன் காதலை சொல்லிவிடுவார் (ஹி ஹி சரி சரி). கடல் கரை ஓரத்தில் நடக்கும் இந்த காதலின் வெளிப்பாடு மிக ரம்யமாக இருக்கும். ஆனால் ஜோதிகா கடைசியாக நடித்த மூன்று படங்களிலும் முற்றிலும் வித்தியாசமான பாத்திரங்களில் செம கலக்கல் நடிப்பு (பச்சை கிளி முத்துச்சரம், மொழி, சில்லென்று ஒரு காதல்). காக்க காக்க படத்தில் வரும் இந்த சீன் எனக்கு பிடித்த லவ் யூக்களில் ஒன்று. பார்த்து ரசியுங்கள்.




மௌனராகம்
இதுவும் மணி ரத்னம்தான். காதல் காட்சிகளை ரசிக்கும்படி எடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். இளையராஜாவின் மிக மிக மிக அட்டகாசமான மனதை சுழட்டும் அந்த பிண்ணனி இசையில், மௌனராகத்தில் கார்த்திக் ரேவதியிடம் தன் காதலை வெளிப்படுத்தும் தடாலடியான காட்சி எனக்கு பிடித்த லவ் யூக்களில் ஒன்று. பின்னணி இசையின் முக்கியத்துவத்தை தமிழுக்கு சொன்ன படம். அப்போது கார்த்திக் எல்லா திரைப்படத்திலும் கதா நாயகனாக செம கலக்கு கலக்கினார். இப்போது கூட கலக்குகிறார் அரசியலில் காமெடியனாக,..





வழக்கம்போல் தமிழிஸில் ஓட்டுப் போட மறந்துவிடாதீர்கள் நண்பர்களே,..

வெள்ளி, 24 ஜூலை, 2009

வெளி நாடு வாழ் இந்தியர்கள் சிங்கங்களா இல்லை குரங்குகளா??

இந்த பதிவை முழுசாக படிக்க நினைப்பவர்கள், நேற்றைய இதன் முந்தைய பதிவையும் சேர்த்து படியுங்கள். இது முந்தைய பதிவு மன்றத்தின் தொடர்ச்சி,..


தீர்ப்பு என்ன சொல்ல ?

வெளி நாடு வாழ் இந்தியர்கள் என்றாலே உங்களுக்கு இளக்காரமாய் போய்விட்டது. உலகிலேயே பிறந்த மண்ணிற்கே பணத்தை அனுப்பும் கூட்டம் எது தெரியுமா? அது இந்தியனின் கூட்டம்தான். 2007 ஆம் ஆண்டு உலக வங்கி கணக்குப்படி இந்தியாவிற்கு வந்த NRI பணம் மட்டும் 27 பில்லியன் டாலர்கள்,.. (1.2 லட்சம் கோடி இந்திய ரூபாய்). சொந்த மண்ணிற்கு தேசத்திற்கு பணம் அனுப்பும் நாட்டு மக்களில் இந்தியாவே முதலில் இருக்கிறது. இது அன்னிய நேரடி தொழில் முதலீடுகளைவிட மூன்று மடங்கு அதிகம். இந்த பொன் முட்டையிடும் வாத்தை இழக்க இந்தியா தயாரில்லை. அதனால்தான் NRIகளுக்கு சலுகையாக வழங்குகிறது. உங்கள் பணத்தை கலர் டிவியாகவும், கேஸ் ஸ்டவ்வாகவும் அரசு வழங்கிய போது அமைதி காத்த நீங்கள் NRI என்றதும் ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது? நாங்கள் என்னதான் சம்பாரித்தாலும் எங்கள் பணம் இங்குதானே வருகிறது? அது உங்களுக்கு போனஸ்தானே. துபாய் சொன்னதுபோல் ஒவ்வொரு உயிருக்கும் தன் வாழ்வை சௌகர்யமாக அமைத்துக் கொள்ள உரிமை உள்ளது. அது சிங்கமாக இருந்தாலும் சரி, இல்லை குரங்காக இருந்தாலும் சரி. அது அவைகளின் சொந்த உரிமை. எனக்கொரு பிரச்சனை என்றால் யார் வருவார்? நான் தானே பார்த்து கொள்ளவேண்டும்? நீங்கள் யாரும் வருவீர்களா?? இல்லையே, எனக்கும் என் குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்பிற்கும் நாங்கள் சேர்க்கிறோம்.இதில் அடுத்தவர்களுக்கு என்ன பிரச்சனை?? என் பாதுகாப்பிற்காக என் உழைப்பில் நான் சம்பாரிக்கும் பணத்தை கேள்வி கேட்க நீங்கள் யார்??

இப்படியெல்லாம் நம்ம வெளி நாடு வாழ் இந்தியர்கள் கேக்குராங்க,..ஆனா எனக்கு தோன்றது இது தான்,..நீங்கள் (NRI) எவ்வளவு பேர் போயி எவ்வளவு காசு அனுப்பினீங்க,.. என்ன மாற்றம் வந்துச்சு? இல்லையே ஏன்.? காரணம் என்ன? நீங்கள் சம்பாதிப்பதை உங்களின் குடும்பம் முன்னேற பயன்படுத்துகிறீர்கள். வீடு வாங்க, நிலம் வாங்க, பேங்கில் போட இப்படி பல. இதனால் உங்கள் குடும்பம் முன்னேறியது. ஆனால் நாடு?? இது ஏற்ற தாழ்வுகளை உருவாக்கும் காரணியா இல்லையா? ஆனால் அன்னிய நேரடி முதலீடுகள் வரும் போது அது நாட்டிற்கு நல்லது. காரணம் பணம் வீடாகவும், காராகவும் முடங்குவதில்லை.அன்னிய முதலீடு தொழிலை பெருக்குகிறது. உற்பத்தியை அதிகரிக்கிறது. உற்பத்தி அதிகரிக்கும் போது நாட்டினுடைய வளர்ச்சியை கண்கூடாக காணலாம். அதனால்தான் அரசாங்கம் நேரடி அன்னிய முதலீடுகளில் கவனம் செலுத்துகிறது. இதுதான் காரணம்.

எனக்கு தெரிந்தவரை பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல. ஆனால் பணமின்றி வாழ்க்கையும் இல்லை. அதனால் உங்கள் தேவைகளுக்கு உங்கள் லட்சியங்களுக்கு வெளிநாடு செல்வதில் தவறில்லை. போய் உலகத்தை தெரிந்து கொள்ளுங்கள். உலகத்திலுள்ளவனுக்கு என்ன தேவை என அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் உயர்வதற்கு என்ன என்ன வழி இருக்கிறதென்று பாருங்கள். உன் இந்தியன் ஒருவன் உயர்வதற்கு கூட வழி இருக்கா என்பதையும் பாருங்கள். பருந்துகள் மேலே பறக்கும்போது சின்ன பட்டங்களையும் தூக்கிகாட்டுவதில் ஒன்றும் தவறில்லை. பருந்திற்கும் ஒன்னும் நட்டமில்லை. நீங்கள் எப்படியோ நாட்டின் பவளங்கள்தான். கடல்தான் பெரிய பரப்பு அதுதான் நிம்மதி என பவளம் எங்கோ ஒரு கடலில் நீங்கள் கிடப்பதில் என்ன பலன். அது இருக்கிற இடத்தில் இருந்தால் தங்கத்திற்கும் பதிப்பு, பவளத்திற்கும் மதிப்பு.

உலகிலேயே முதல் நிலை பணக்காரரான லஷ்மி மிட்டல் தெரியுமா? நிறப்பாகு பாடு காட்டும் கூட்டத்திலிருந்து வர எப்படி போராடிருப்பார். பாராட்டக்கூடிய விஷயம். ஆனால் அவர் மகள் திருமணம் எப்படி நடந்தது தெரியுமா? தங்கத்தை குழைத்து அதில் வைரத்தை ஒட்டி ஆடையாய் செய்து மகளிற்கு திருமணம் செய்தார். இவர் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர். ஆனால் எல்லா நாடுகளிலும் முதலீடு செய்துள்ளார். இந்தியாவிலும் ஏதோ பிச்சைகாசு அளவிற்கு முதலீடு என்று கேள்வி. என்னைப் பொருத்தவரை மிட்டல் ஒரு தவறான உதாரணம். (மகள் கல்யாணத்திற்கு முன்னூறு கோடி செலவழித்த புண்ணியவான்) அவனைபோல் யாரும் இருக்காதீர்கள் என்பதற்குத்தான் இந்த பதிவு மன்றமே. அந்த ஆளிற்கு சத்யம் ராஜூ எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்வேன்.



அதனால் வெளி நாடு செல்லுங்கள், உழைத்து பொருள் ஈட்டுங்கள். அந்த பொருளை வைத்து அங்கேயே இருக்காதீர்கள். நம் நாட்டிற்கு திரும்ப வாங்க. முதலீடு கொண்டு புதிய தொழில் தொடங்குங்கள். அங்கு வேலையில்லாமல் அடாவடியாக திரியும் நம்ம மாடசாமிக்கு ஒரு வேலை போட்டுக்கொடுங்கள். திருந்துவான்.

அதனால் நீங்கள் யாருக்கோ உழைப்பதற்கு இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் உழை என்று சொல்கிறேன்.

வரப்புயர நீருயரும்
நீருயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயர்வான்
கோன் உயர நாம் உயர்வோம்.

சிங்கங்கள் குரங்காவதில் தப்பில்லை. சுற்று சூழலில் பெரும் ஆபத்து வந்தால் உணவில்லாமல் சிங்கங்கள்தான் முதலில் சாகும். குரங்குகள் அல்ல. உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் குரங்குகள் துபாய்லேயே இருந்து கடைசி காலத்தில் இங்கு வந்தால் மற்ற சிங்கமும் கண்டுக்காது, எந்த குரங்கும் கண்டுக்காது. அது காட்டிற்கு நல்லதில்லை.

பதிவு பிடித்திருந்தால் மத்தவங்க காவ்யா மாதவானிற்கு போட்ட ஓட்டை நீங்க எனக்கு போடுங்க,..


NRI சிங்கங்களா இல்லை குரங்குகளா??



அந்த வறண்ட இந்திய வனவிலங்கு சாலையில் ஒரு சிங்கம் வெறுத்துப்போய் இருந்தது. நமக்கு தினமும் ஒரு கிலோ கறிதான் கொடுக்குறாங்க, நமக்கு பத்தவே மாட்டிங்குது என்று. அப்போது துபாயிலிருக்கும் வனவிலங்கு சாலைக்கு ஒரு சிங்கம் வேண்டும் என்று ஒரு ஷேக் வந்தார். சிங்கத்திற்கு ஒரே மகிழ்ச்சி,.. தன் மனைவிகளையும் (??) குட்டிகளையும் விட்டு விட்டு ஒரு நாளைக்கு இரண்டு ஆடு கிடைக்கும் என்று எண்ணி துபாய் வனவிலங்கு சாலையை அடைந்தது.

அங்கு போனதும் முதல் நாள் சாப்பாடு பார்சல் வந்தது. பார்த்தால் ரெண்டு வாழைப்பழம். சரி, நம்ம முதலாளிக்கு நம் உடம்பின் மேல் கரிசனம் என்று விட்டுவிட்டது. அடுத்த ரெண்டு நாட்களும் தொடர்ந்து அதே வந்த படியால் சிங்கத்திற்கு கோபம் தலைக்கேறியது. இதை விட கூடாது என்று எண்ணி நேராக மேலாளரைப் பார்த்தது." என்னைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டு இருக்கீர்கள், நான் அந்த வனவிலங்கு சாலையில் ராஜாவாக இருந்தேன், இங்கு வந்து எனக்கு என்ன வாழைப்பழம் போட்டு ஏமாற்றப் பாக்குறீர்களா???" என எகிறியது. அதற்கு அந்த மேலாளர் சொன்னார் "ஐயா, நீங்கள் அங்கு சிங்கம் என எனக்கும் தெரியும், ஆனால் நீங்கள் வந்திருப்பது குரங்கின் விசாவில், எனவே உனக்கு குரங்கிற்கான உணவே வழங்க வேண்டும் என்பது எனக்கு வந்த உத்தரவு" என கோபப்படாமல் சொன்னான். இப்போது அந்த சிங்கம் தனக்கு அந்த ஒரு கிலோ கறியாவது கிடைக்காதா என ஏங்கிக் கொண்டு உள்ளது"

கதையின் கருத்து ; எங்கோ குரங்காக இருப்பதைவிட இந்தியாவில் சிங்கமாக இருங்கள் NRIக்களே,..

என்னை மின்னஞ்சலில் வந்த இந்த கதை மிகவும் சூடாக்கியது. ஆனால் யோசித்துப் பார்த்தால் கருத்து சரியானது போலவும் தோன்றியது. எனவே இதை விவாதமாக நடத்த இரண்டு குழுக்களாக நானே பிரித்து உள்ளேன். கருத்திற்கு மறுப்பு தெரிவித்து துபாய், லண்டன் சிங்கப்பூர், ஒரு அணியாகவும், மேலே சொன்ன கருத்து சொன்னது சரியே என்று மதுரை, சென்னை, கோவை என இன்னோரு அணியாகவும் விவாதிக்கலாம்.

துபாய் (தவறு)

ஒவ்வொரு உயிருக்கும் தன் வாழ்வை சௌகர்யமாக அமைத்துக் கொள்ள உரிமை உள்ளது. அது சிங்கமாக இருந்தாலும் சரி, இல்லை குரங்காக இருந்தாலும் சரி. அது அவைகளின் சொந்த உரிமை. அவைகளின் அதிர்ஷ்டம். வீட்டு நாயிற்கு தினமும் பால் சோறு கிடைக்கிறது என்பதற்காக வெளியில் இருக்கிற நாய் குரைக்க கூடாது. வீட்டு நாய்க்கு அதிர்ஷ்டம் உமக்கு இல்லை அவ்வளவே. தானும் தன்னை சார்ந்தவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று இந்த சிங்கம் நாயாகி, குரங்காகி அங்கே போய் உழைத்து கஷ்டப்பட்டு ஆடு ஆடாக சேர்த்து சேர்க்கிறது. இங்கே வந்தவுடன் இங்கே இருக்கிற தன் சக சிங்களுக்கு ஆட்டை அடித்து பிரியாணி வைக்கிறது. தான் குரங்காகி மற்ற தன் ரத்த சிங்கங்களை செழிப்பாக வைத்திருக்கிறது. தினமும் அரைக்கிலோ சாப்பிடும் சிங்கத்திற்கு பொறாமை, ஒரு குரங்கு சம்பாரித்து தன் சொந்தங்களுக்கு மட்டுமே தந்து கொழு கொழுவென இருக்கிறது, நாம் எழும்பும் தோலுமாக இருக்கிறோம் என்ற வயிற்றெச்சல் அவ்வளவுதான்.

மதுரை (சரி)

அண்ணே, வணக்கண்ணே. நீங்க சிங்கம்மா இருங்க, இல்ல அசிங்கமா இருங்க, எங்களுக்கு கவலை இல்லண்ணே. ஆனா, இங்கன்ன நாங்க தோட்டத்துல கஷ்டப்பட்டு சம்பாரிச்சு தேங்காயை நீங்க பத்து ரூபாய்க்கு வாங்குறீங்க,. நாங்க கேனப்பய மாதிரி 2 ரூபாய்க்கு விக்கிறோம். எதுக்கு?? எங்கல தூக்கிவிட அரசாங்கம் இருக்குன்னு ஒரு நம்பிக்க,. என்னைக்காவது எம்புள்ளையும் ஆபீஸ்ல உக்காரும் ஒரு நப்பாசை. ஆனா இந்த அரசாங்கம் என்ன பண்ணுது? ஒரு இஞ்சினியர ரெடி பண்ண 10 லட்சம் செலவு பண்ணுது, ஒரு டாகடர ரெடி பண்ண 25 லட்சம் செலவு பண்ணுது. நீங்க என்னா பண்றீங்க?? அரசு பணத்துல படிச்சுட்டு அமெரிக்கா, லண்டன்னு போய்றீங்க,. நாங்க கஷ்டப்பட்டு சம்பாரிக்கிற அரிசி நாங்க தின்றதில்லயா, இவிங்கலுக்குதான் அனுப்பி விட்டராய்ங்க,.. ந எமக்கு 2 ரூபா அரிசியையும், சீமத்தண்ணியயையும் குடுத்து முடிச்சுபுடுறாய்ங்க. நாங்க இங்கன அடுப்பெறிய ராவெல்லாம் ஊதிக்கிட்டுருக்கோம்.

மொதல்ல டாக்டருக்கு படிச்சு முடிச்சொனே ரெண்டு வருஷம் எங்க சிலுக்குவார்பட்டிக்கெல்லாம் வந்து சேவகம் செஞ்சிட்டு, அப்புறம் அது சிங்கம்புணேரில வேல செஞ்சா யென்ன, சிங்கப்பூர்ல வேல செஞ்சா யென்ன? என்னாண்ணே நாஞ்ச்சொல்றது?/

லண்டன் (தவறு)
இங்கே இருக்கிற அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் நண்பர்களே. ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் அன்னிய முதலீடுகளேயே இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். கூடுதலாக உள் நாட்டில் அதிக அளவு உற்பத்தி இருக்க வேண்டும் இன்னும் அது நமக்கு பலம். நீங்கள் இறக்குமதியை குறைத்து அதிகளவு ஏற்றுமதி செய்வதால் உங்களுக்கு உங்களின் ரூபாயின் மதிப்பு கூடுகிறது. நீங்கள் தானியங்களையும், துணிகளையும், சர்க்கரையயும், மருந்துகளையும் ஏற்றுமதி செய்கிறீர்கள். எங்களுக்கு அவ்வளவு வசதியில்லை. அதனால்தான் எங்களையே விற்பனை செய்கிறோம். அது சிலருக்கு அறிவு சார்ந்த மூளையாக இருக்கிறது, சிலருக்கு கடின உழைப்பை தரும் கை, கால்களாக இருக்கிறது. இந்தியாவில் உயிரை கொடுத்து செய்யும் உடல் வேலையை (physical work) எடுத்துக் கொள்ளுங்கள். இருபது மாடி கட்டிடங்களில் எந்தவித பாதுகாப்பு கருவிகளில்லாமல் வேலைசெய்யும் ஒருவனுக்கு அதிகபட்சம் எவ்வளவு சம்பளம் உங்கள் பணக்கார முதலாளிகள் தருவார்கள். ஒரு 25 ஆயிரம் அதிகபட்சம்?? ஆனால் கீழே உள்ள படத்தில் வேலை செய்பவர்க்கு சம்பளம் 5 லட்சம். நான் இவரையும், அவரையும் ஒப்பிட முடியாதது உண்மைதான், ஆனால் உயிர் ஒன்றுதானே? அது இருபது மாடியில் போனால் என்ன? இல்லை 200 மாடியில் போனால் என்ன?.நாங்கள் வேலை செய்வது இந்தியாவை வளம் கொழிக்கத்தான் முதலில் இங்கு இருப்பவர்கள் புரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.








சென்னை (சரி)
நமஸ்காரம். நீங்க ஒன்ன பாக்கணும் பெரியவாளே, எந்த உயிருக்கும் அதோட தர்மப்படி வாழ்றதுக்கு உரிமை உண்டுங்கிறது வாஸ்தவம்தான். அது எப்போதுன்னு நோக்கினானேன்னா அடுத்தவாளை டிஸ்டர்ப் பண்ணாம இருக்கணும். எப்படி? நா மேலை பாக்குற பேங்குளேயே தனியா NRIக்கு அக்கவுண்ட் திறந்திர்ராள். அவாளுக்கு தனி க்யூ, நேக்கு தனி க்யூ. அவாளுக்கு ட்ரீட்மெண்ட் வேற, மத்தவாளுக்கெல்லாம் வேற, இது தான் சம நீதியான்னு கேக்குன்றேன். இங்க கஷ்டப்பட்டு உற்பத்திய பெருக்கிறவாளுக்கு ஒரு நீதி, படிப்ப முடிச்சன்னே அமெரிக்கா, பேரிக்கான்னு போறவாளுக்கு ஒரு நியதி. ஏன் நேக்கு கூடதான் மலேசியா offer வந்தது, நான் ஏன் ஜோய்ன் பண்ணல்ல? நேக்கு பெரியாவல்லாம் இருக்கா, அவாளுக்கு கடைசி காலத்துல சேவகம் பண்றத விட்டு விட்டு கண்டவாளுக்கெல்லாம் பண்ண சொல்றியாளா?. என் கேள்வி என்னன்னு கேட்டியாள்னா நீ அங்க பண்ற வேலையை இங்கே பண்ணினா ஏன் குறைஞ்சு போயிருவேள்னு கேக்குறேன். வெள்ளிக்கிழமைன்னா மொதல்லெல்லாம் எல்லாம் அம்பாள் சன்னதிக்கு வருவாள், இப்போ டாஸ்மார்க்குல்ல போறாள். இப்படி புத்தி இல்லாம திரியிர கூட்டத்த யார் கட்டுப்படுத்துவா? யாரும் பொறக்கும்போதே மஹாலஷ்மிய அழைச்சுண்டு வர்ரதில்ல, அது அவா அவாளுக்கா அமையுறது. சரி அன்னிய முதலீட்டுன்னாலதான் பலன் உண்டு, சொல்றேள் வாஸ்தவம். அதுக்கு நீ ஏன் துபாய்க்கு போறேள். நான் ஒரே ஒரு எக்சாம்புள் சொல்றேன். அந்த பாலும் குழந்தைக்கு 27 வயசு.(???) ஆனால் அவாளுக்கு கீழே 200 பேர் வேலை பாக்குறாள், கோடி கோடியா சம்பாதிக்கிறாள் யார் அவாள்? ஒரு குடிசை வீட்டுல பொறந்து எப்படி சரத் பாபு வந்தார். ஏன் அவாளுக்கெல்லாம் கஷ்டம் இல்ல? அவாளுக்கு ஒரு நோக்கம் இருந்தது, நோக்கு பணம்தான் நோக்கம், அதுதான் ப்ராணனை எடுக்கிர்றது.. சரத்பாபு நினைச்சா கிளம்பிருக்க முடியாதா? ஏன் அவாளுக்கு குடும்பம் இல்ல?? அவா மட்டும் எப்படி தன்னையும் உயர்த்திக்கிட்டு அடுத்தவாளையும் தூக்கிவிட்டா?. ஏன் அது மாதிரி நீ நினைக்கமாட்டீர்ரேள்னு எல்லாம் கேக்குறா, நானும் கேக்குறேன். அதுக்கு பதிலை சொல்லும்,.. அரசாங்க பணத்தில வளர்ந்துட்டு, எவனோ ஒருவன் நெல் விதைக்க நீ பொங்கி சாப்பிட்டுட்டு இந்தியாவுல வளர்ற அடுத்தவாளை பத்தி பேச நோக்கு என்ன யோக்யதை இருக்கு??

அடுத்த இரு விவாதங்களும், தீர்ப்பும் நாளைக்கு,.. (அது கூட உங்கள் பின்னூட்டத்தை பொறுத்தது.)

ஆகா,.. வர்ரவுங்க பிடிச்சிருந்தா தமிழிஷ்ல ஒரு குத்து குத்திட்டு போங்கப்பா



.

திங்கள், 20 ஜூலை, 2009

கூகுள் என்ஜினியரிங் - சுவாரஸ்ய பதிவு

எல்லோரும் சுவாரஸ்ய பதிவு, சுவாரஸ்ய பதிவுன்னு எழுதி தள்ளுராங்களே,. அதுக்கு விருது வேற வாங்கி கலக்குறாங்களேன்னு நினைச்சுகிட்டு இருக்கிறப்ப செந்தாழல் ரவியின் விருது என் அன்பிற்குரிய பதிவாளர் திரு எவனோ ஒருவன் வழிமொழிதலின் காரணமாக எனக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அவருக்கு எனது நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

இதன் காரணமாக எனக்கு ஒரு வேட்கையும், உற்சாகமும் தோன்றியது. இது வரை எப்படி எழுதினாய் என்பது முக்கியமில்லை. இனிமேலாவது ஒழுங்காய் எழுத வேண்டும் என தோன்றியது. அதன் காரணமாக மிக,மிக,மிக யோசித்தேன். எல்லோரும் டெக்னிக்கல் பதிவு போடுகிறார்கள்,.. நாமும் ஏதாவது போடலாமே என தோன்றியது. ஆனால் அதற்கு ஏதாவது டெக்னிக்கலாக ஏதாவது தெரிந்திருக்க வேண்டுமே என யோசித்த போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. எல்லாரையும் போல் SAP, ஜாவா, சுமத்ரான்னு ஓவராக போக கூடாது, என் அறிவுக்கு எட்டியதாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் எல்லோருக்கும் பலனளிப்பதாகவும் இருக்க வேண்டும். என்ன செய்யலாம் என யோசித்த போதுதான் எனக்கு கூகுள் நியாபம் வந்தது. எங்கள் பொறியியலில் எந்த ஒரு சிக்கலுக்கும் நாங்கள் விடை நாடி செல்வது கூகுள். ஒரு கேள்வியை நீங்கள் தூக்கி வீசினால் அது ஓராயிரம் பதில் தரும். இப்படி கூகுள் மூலம் நாங்கள் உருவாக்கும் என்ஜினியரிங், கூகுள் என்ஜினியரிங் என எல்லோராலும் அழைக்கப்படுகிறது (ஹி ஹி தலைப்பு வந்துருச்சு).

எனக்கு இருக்கும் தலையாய பிரச்சனை கடவு சொல்லும், ரகசிய குறியீடும் (அதாங்க user name, password). ரகசிய குறியீட்டை நான் அடிக்கும் போது யாராவது பார்த்துவிடுவார்கள் என பீதியின் காரணமாக நான் தப்பு தப்பாய் அடித்து நிறைய அக்கவுண்டுகள் காலியாகிவிட்டன. எனவே இதையே நம் தலைப்பாக கொள்ளலாம் என நினைத்து தேடி அழைந்தபின் கூகுளினால் எனக்கு அட்டகாசமான பதில்கள் கிடைத்தன. இவை எனக்கு எளிய முறையாகவும், எல்லோருக்கும் புரியும்படி ஒரு டெக்னிக்கல் பதிவு போட வாய்ப்பாகவும் அமையும் என்பதால், இந்த வழி முறைகளை கீழே இணைத்துள்ளேன். எல்லோரும் படித்து உங்கள் பார்வைகளை பகிரலாம். ஆனால் ஒரு நிபந்தனை, அவை கீழே சொன்னது போல் எளிய முறையில் இருக்க வேண்டும்,.. ஆமா,..

முறை ஒன்னு

நீங்கள் கீ பேடை மறைத்துவிடுங்கள், யாராலும் பார்க்க முடியாது.







முறை ரெண்டு

நீங்கள் மானிட்டரை மறைத்து விடுங்கள், ஏற்கனவே கீ பேடும் மறைந்து இருப்பதால் உங்களின் ரகசிய குறியீடு மேலும் பாதுகாப்பாகிறது.





முறை மூணு

இது மிக மிக பாதுகாப்பான முறை. இதன் மூலம் உங்கள் ரகசிய குறியீட்டை நீங்களும் உங்கள் மானிட்டரும் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் இந்த முறை வலுவானதாக இருக்கிறது. இதில் என்ன ஒரு வசதி என்றால் நீங்கள் யார் என்பது கூட தெரியாது. இதனால் நீங்கள் என்ன வேணாலும் பார்க்கலாம். இந்த முறையின் காரணமாக நீங்கள் இரட்டை பலனை அடைகிறீர்கள் (technically speaking duel benefit).











என் டெக்னிக்கல் பதிவிற்கு என் ஆலோசராக இருந்த பதிவர் பரட்டைக்கு என் நன்றி.




அடுத்ததாக நான் சுவாரஸ்ய விருதை வழங்குவது மூவருக்கு,..

1. கலகலப்பிரியா,.. ( பாரதியின் தங்கை, அக்கினி குருதி தெரிக்கும் இவர்களின் கவிதைகளுக்கு நான் அடிமை)
2. சாதிக் அலியின் தமிழ் குருவி (பதிவுகள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என நினைக்கும் பதிவுகளுக்கு சொந்தகாரர்)
3. ஆகாய நதி ,.. (எங்கோ நடக்கும் ஒரு நிகழ்வை பக்கத்தில் நடப்பது போல் எழுத்தில் கொண்டு வரும் திறமைசாலி)

என் வாழ்த்துக்கள், நண்பர்களே,..


இந்த பதிவு சுவரஸ்யமாக இருந்துச்சுன்னு நம்புரேன்,.. இதை நம்பாதவர்கள் என் முன்னால் உள்ள பதிவிற்கு செல்ல பரிந்துரைக்கிறேன்,..

மீ ப்ர்ஸ்டு



பெத்த மனசு


எவனோ ஒருவனிற்கு மீண்டும் என் நன்றிகள்.




சனி, 18 ஜூலை, 2009

தண்ணி வண்டி

மனுசன் தண்ணி அடிச்சிட்டு மையவிலக்கு விசை, மைய நோக்கு விசை கலந்து நடப்பது பார்க்க காமெடி (தள்ளி நின்னுதான்),.. இதுல விலங்குகள் தண்ணி அடிச்சா???


இன்று எதேச்சையாக ஒரு விடியோவை பார்க்க நேர்ந்தது. ஆப்பிரிக்காவில் வறட்சியான கோடைகாலங்களில் விலங்குகள் அங்கே கிடைக்கும் ஒருவித பழங்களை சாப்பிடுகின்றன. அதிக ஆல்கஹால் கொண்ட இந்த பழங்களை சாப்பிட்ட பின் ஆடுகிற ஆட்டத்தை பாருங்கள். (வீடியோதான் கொஞ்சம் பழசுமாதிரி தெரிகிறது)






.

வெள்ளி, 17 ஜூலை, 2009

எதை சொல்ல





என்னை மதித்து என் பள்ளி அனுபங்களை எழுத சொல்லி என்னை தொடர் பதிவிற்கு அழைத்த திரு. செந்தில் வேலிற்கு என் மனமான நன்றி. மற்றவர்களை போல் என் பள்ளி வாழ்க்கை பசுமை நிறைந்து இல்லாமல், இன்னல் மட்டுமே நிறைந்ததாக இருந்தது. பள்ளி வாழ்க்கை என்றதும் அது மின்னலாய் வந்து போகும். அதில் எதை சொல்ல

நண்பகல் சத்துணவிற்காக தட்டுடன்
பசி நிறைய வரிசையில் நின்றதா - இல்லை
தாமதமாய் வந்து சாம்பாரில்லாமல் வெறும்
சோற்றோடு குழாய் தண்ணி விட்டு தின்னதையா?

பேனாவில்லாமல் அடுத்தவனிடம் திருடி
கணிதத்தில் வாங்கிய 100 மதிப்பெண்ணா - இல்லை
அடிபட்டு ரத்தம் ஒழுக மைதானத்தில்
டென்னிஸ் பந்தில் விளையாடிய கால்பந்தா?

டியூசன் வராததால் நொண்டி சாக்கு சொல்லி
வாரம் முழுக்க முட்டி போட வைத்த ஆசிரியரா - இல்லை
100 ரூபாய் கட்டமுடியால் பள்ளியின் வெளியில் நின்ற போது
எனக்கு பணம் கட்டிய வெங்கடேஸ்வரன் ஆசானையா?

பதினோராம் வகுப்பில் முதன் முதலாக போட்ட
என் அண்ணனின் பழைய பேண்ட்டா - இல்லை
பத்தாம் வகுப்பு வரை நைந்து நூலாகி
ஒட்டுப்போட்ட என் காக்கி டவுசரா?

தினமும் தனியாய் செருப்பில்லாமல் 8 கிமீ
நடந்து படித்த அரசு நாடார் பள்ளியா? - இல்லை
புரியாத மாணவர்களுக்கு அணித்தலைமை மாணவனாய்
இருந்து எடுத்த சிறப்பு வகுப்புகளா?

நவம்பர் தீபாவளியின் கோஆப்டெஸின் புது துணிக்கு
சனவரியிலியே தேடி பார்த்த நாட்காட்டியா? - இல்லை
தோட்டத்தில் சாணி அள்ளனுமே விடுமுறை ஏன் வருகிறது
என பள்ளி திறப்பிற்கு ஏங்கி காத்திருந்த ஜூன் மாதங்களா?

கண்கள் சிவக்க கிணற்றில் போட்ட
கல்லை எடுத்து வந்த மூச்சு விளையாட்டா - இல்லை
கூட வந்த நண்பன் குளிக்க, பத்து ரூபாய் காசில்லாமல்
அவன் துணிக்கு வெளியில் காவல் நின்ற நீச்சம் குளமா?

ஆங்கிலத்தில் பலவீனமாய் இருக்கேன் என
கவனமெடுத்து சொல்லி தந்த தோழியா- இல்லை
அவன் விரும்பிய தோழி என்னுடன் இருக்கிறாளென
வீட்டில் சொல்லி அடி வாங்கித்தந்த நண்பனா?

ஆடிக்காற்றில் மதிய வெயிலில் நெல்லையையும் உமியையும்
பிரித்து வேலை செய்த அந்த சாணி மொழுகிய முறமா? - இல்லை
தீபாளியன்று கறி எடுத்து சாப்பிடுகையில் அப்பாவிற்கு மட்டும்
ஏன் கறி அதிகம் என கணக்கு போட்ட தட்டுகளா??

அடிபட்ட குருதி அழிந்து போனாலும்
வலி மறைந்து போனாலும்,
அது விட்டு சென்ற காயங்கள்
சரியாய் வந்து நினைவுபடுத்தும்.
கொடியது கொடியது
இளமையில் வறுமை கொடியது ,..

அடுத்து நான் அழைக்க நினைப்பது எவனோ ஒருவன், மற்றும் ஆகாய நதி.
நன்றாக எழுத என் வாழ்த்துக்கள்.

நண்பர்களே படித்து பிடித்திருந்தால் தமிழிஸில் மறந்துவிடாமல் ஒட்டு போடுங்கள், வர வர ஒண்ணும் ஹிட் லிஸ்ட்ல வரமாட்டிங்குது.


.

வியாழன், 16 ஜூலை, 2009

மீ த ப்ர்ஸ்டு

அது ஒரு கோடை காலம்,.. நானும் என் நண்பரும் கொடைக்கானல் சென்றோம். அதன் மலைகளையும், காடுகளையும், மற்றும் எல்லா அழகையும் ரசித்துக் கொண்டே வந்தோம். என் நண்பரும் பதிவர் மாதிரி. அவருக்கும் என்னை மாதிரியே பின்னூட்ட வியாதி உள்ளது. அவர் எழுதிய பின்னூட்டங்களை சேர்த்துப் போடாலே 100 பதிவை தாண்டிவிடும். அவரிடம் நான் அடிக்கடி கேட்பேன், "இவ்வளவு பெரிய பின்னூட்டம் போடுற நீங்கள் ஏன் பதிவுகளை அள்ளித் தெளிக்க கூடாது?

"அடே ஊருல நிறைய பேரு சோறாக்கிட்டு எல்லாரும் எல்லாரும் வாங்கன்னு சொல்லிட்டு இருக்காய்ங்க,.. அவிங்க மனசு கஷ்டப்படக்கூடாதுல, அதான் போய் சோறு தின்னூட்டு மொய் வச்சிட்டு வர்ரேன்"

"சரி மச்சான் நீ சொன்னா சரியாதான் இருக்கும், பதிவை படிச்சவுடனே பின்னூட்டமே எழுத தோணல, ஆனா என்ன பண்ணுவ"

"கேளு, இந்த மாதிரி",. கீழே குனிந்து மண்ணில் போட்டுக் காட்டினார்,.
:)

:)))))))))))))))))

:D

"அப்புறம்"இது நான்தான்

:(


:((((((((((((((


"எல்லாம் சரி, இதைவிட கொஞ்சம் பெருசா எழுதனும்னா??"

"அவ்வ்வ்வ்வ்வ்"

"என்ன படிச்சொனே வாந்தி வருதுனு சொல்றீயா?"

"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,.."

"என்னா மச்சான் ரொம்ப வாந்தி வருதா??"

"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், வேணாம், நான் அழுதுறுவேன்,.." வடிவேலு மாதிரி அழுதுக்காட்டினார்.

"ஓ அந்த அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வா"

"சரி, பதிவு உண்மையிலேயே நல்லா இருக்கு,.. என்ன எழுதுவ?"

"அருமை, அற்புதம், கலக்கிட்டிங்க தல, கலங்கிட்டோம் தலைவா, பாராட்டுகள் தலை, சூப்பர் பாஸ், நல்லாயிருக்கு, அருமையான பதிவு, பெயர் சொல்லும் பதிவு, அழுகை வருது, சிரிச்சு சிரிச்சு வாயெல்லாம் வலிக்கிது, பக்கத்துல இருக்கவனுக்கு வயிறெல்லாம் வலிக்குது, ஹா ஹா ஹா. ஹி,ஹி,ஹி, ரைட்டு., ரொம்ப ரைட்டு, கலக்கல்.அடிச்சு ஆடுங்க!, சிங்கம் கிளம்பிடுச்சு,"

"என்ன மச்சான் அங்க சத்தம்"

"மாப்பிளே, யெதோ யான நிக்கிற மாதிரி தெரியுதுடா"

"அடே ஆமாண்டா, அய்யோ ஓடுறா, ஓடுறா,

"பள்ளம், பள்ளமா பாத்து ஓடுறா, அப்பதான் யான தொறத்தாது"

"சரிடா, சரிடா,."

ஓடினோம். எங்களுக்கும் யானைகளுக்கும் கொஞ்சம் இடைவெளி அதிகரித்து கொண்டு இருந்தது,.. (இடைவெளி என்றால் மெரினா கடற்கரை ரோட்டிலிருந்து கடல் அலை உள்ள தூரம்)

என் நண்பர் கொஞ்சம் பாசமாக வளர்ந்தவர் (அப்படினா தொப்பை ஜாஸ்தினு அர்த்தம்) என்பதால் அவரால் ஓட முடியவில்லை. பக்கத்தில் உள்ள குகை போல புதரில் பதுங்கிவிட்டார். அது மிக சின்ன இடம். பக்கத்திலேயே நானும் பதுங்கினேன். அந்த இடத்தில் நான் தான் முன்னாடி இருந்தேன். "அய்யோ யானை மிதித்தால் நம்மைதானே முதலில் மிதிக்கும்" இவன் வேறு பக்கத்தில் நீராவி ரயில் மாதிரி புஸ் புஸ்சென்று மூச்சு வாங்கி கொண்டிருக்கிறான். "ஆகா, இவன் பக்கத்தில் உக்காந்தா பாம்பு படமெடுத்தா கூட தெரியாது,.. ஓடிட வேண்டியதுதான்"

"மச்சான் நான் மரத்துல ஏறி உட்கார்ந்துர்ரென்"

"மாப்ளே எனக்கு மரமேற தெரியாதுடா"

"அதான் எனக்கு தெரியுமே"

நான் சத்தமில்லாமல் வேகவேகமாக சரசரவென பக்கத்தில் இருந்த ஆல மரத்தில் ஏறினேன். நான் ஏறியதை கண்டு மரத்தில் இருந்த குருவிகள் கீஸ்கீச்சென கத்திக் கொண்டு பறந்தன. பறவைகள் சத்தம் கேட்டு மூணு யானைகள் எங்கள் பக்கம் வந்துவிட்டன. எனக்கு கொஞ்சம் தொலைவிலும் நண்பருக்கு ஒரு ஐந்து அடியிலும் அவை இருந்தன. நண்பர் குகை புதரில் இருந்ததால் அவ்வளவாக தெரியவில்லை. இப்போது எனக்கு ஒரு SMS வந்தது. நம் பின்னூட்ட நண்பர் அந்த டென்ஷனிலும் SMS அனுப்பினார்.

"மீ த ப்ர்ஸ்டு"

யானைகளுக்கு படிக்கவா தெரியும். என் மொபைல் சத்ததை கேட்டு விரு விருவென என் மரத்திற்கு கீழே வந்தன. எனக்கு உதற ஆரம்பித்துவிட்டது. எனக்கு பயத்தில் பாத்ரும் வருவது போல் இருந்தது. வேறு வழியில்லை. அடிச்சிட வேண்டியதுதான். மொபைலில் அனுப்பி வைத்தேன்

"ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்"

நான் பின்னூட்ட நண்பருக்கு அனுப்பிய SMS எப்படி யானைகளுக்கு தெரிந்தது. பரவாயில்லை நல்ல ரிங் டோன்.

"ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்கங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கங்"