
இன்று கொடுமை என்னவென்றால் முதல் குழந்தை பெண் என்றால் அடுத்த குழந்தை பெண்ணாக இருப்பதற்கு 54% வாய்ப்புகள் இருக்கின்றன. முதல் இரண்டு குழந்தைகள் பெண் என்றால் அடுத்த குழந்தை 20% சதவீதம்தான் பெண்ணாக வாய்ப்புகள் இருக்கின்றன. காரணம் கருவிலிருக்கும் குழந்தையை ஸ்கேனில் பார்த்து ஆண் என்றால் மட்டும் வளரவிடுவது, இல்லை என்றால் கொன்றுவிடுவது. அதுதான் இன்று நடந்து கொண்டு இருக்கிறது.

1. நீங்கள் பெண்ணின் பெற்றோருக்கு வரதட்சணை கொடுக்க வேண்டி இருக்கலாம். ஆண்கள் பெண்ணிற்கு வரதட்சணை கொடுக்க வேண்டும் என அரசாங்கமே அனுமதி அளிக்கலாம்.
2. இப்போது பள்ளியில் காலையில் நாலு மணிக்கே போய் நிற்பது போல், பெண் வயசுக்கு வந்தவுடன் அட்வான்ஸ் புக்கிங் பண்ண வேண்டி இருக்கலாம். அதை நீட்டிக்க மாதம் மாதம் நீங்கள் சேவை வரி கட்ட வேண்டி வரலாம்.
3. அந்த பெண் எந்த ஆணையும் பார்த்துவிடாமல் இருக்க அதற்கு ஒரு தனியாக சிறப்பு பாதுகாப்பு படை வழங்கி பாதுகாக்கலாம்,. (அப்போது காவலன் படத்தை ரீமேக் செய்யலாம்,. யாருக்குத் தெரியும் அது உண்மை கதை எனக்கூட விளம்பரம் செய்யப்படலாம்).
4. எத்தியோப்பியா, நைஜீரியா, சோமாலியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து இந்திய ஆண்களுக்கு பெண் எடுக்கலாம்.
4. பெண்கள் தன் பேச்சை கேட்காத ஆண் கணவர்களை யோசிக்காமல் விவகாரத்து செய்யலாம்.
5. பெண்ணுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாகலாம், உதாரணமாக பெண் கிடைக்காமல் காய்ந்து போன நபர்கள் அப்பாவி பெண்களை கடத்தி கற்பழிக்கலாம்.
6. விபச்சாரம் ஒரு பணம் கொழிக்கும், அனுமதிக்கப்பட்ட தொழிலாக இருக்கலாம். அதனால் பால்வினை நோய்கள் அதிகமாகலாம்.
மாதராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும் என பாரதி சொன்னது இன்னும் இருபது வருடம் கழித்துதான் உண்மையாகும் போலிருக்கிறது.
சந்ததி தரும் பெண்களுக்கு துணையிருப்போம் கருவிலிருந்து,..
..
