வெள்ளி, 1 ஜனவரி, 2010

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டே,..

ஆண்டுகள் ஓடிக்கொண்டே இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் அது புத்தாண்டே,.

2009 ஆண்டில் கடைபிடித்தது
பதிவுலகம் பொழுதுபோக்கே. முக்கிய கடமைகள் இருக்கும் போது பதிவுகள் எழுத/படிக்க வேண்டிய அவசியமில்லை.( வருட கடைசியில் 4 மாதம் முழுக்க எழுதவில்லை,.)

2010 ஆண்டில் கடைபிடிக்க வேண்டியது
எதற்காக பதிவு போடுகிறோம் என அறிந்து அடுத்தவரின் காலத்தையும் நம் காலத்தையும் வீணடிக்காமல் பதிவு போட வேண்டும். நோக்கம் இல்லாத எந்த பதிவும் குப்பையே. அறிவியல்/தொழில்நுட்பம்/விவசாயம் சம்பந்தமான பதிவுகளில் கவனம் செலுத்த வேண்டும் என இருக்கிறேன் (அவைதான் கேட்பாரற்று கிடக்கின்றன).

அலசி, ஆராய்ந்து, உள்வாங்கி, தக்க சமயத்தில், வெளிக்கொணரும் எந்த காரியமும் வெற்றியே,..

அதை இந்த டைகர் உட்ஸின் அற்புதமான, நினைத்தே பார்க்கமுடியாத இந்த ஷாட் சொல்லும்.

அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Just do it,..





.