வியாழன், 16 ஜூலை, 2009

மீ த ப்ர்ஸ்டு

அது ஒரு கோடை காலம்,.. நானும் என் நண்பரும் கொடைக்கானல் சென்றோம். அதன் மலைகளையும், காடுகளையும், மற்றும் எல்லா அழகையும் ரசித்துக் கொண்டே வந்தோம். என் நண்பரும் பதிவர் மாதிரி. அவருக்கும் என்னை மாதிரியே பின்னூட்ட வியாதி உள்ளது. அவர் எழுதிய பின்னூட்டங்களை சேர்த்துப் போடாலே 100 பதிவை தாண்டிவிடும். அவரிடம் நான் அடிக்கடி கேட்பேன், "இவ்வளவு பெரிய பின்னூட்டம் போடுற நீங்கள் ஏன் பதிவுகளை அள்ளித் தெளிக்க கூடாது?

"அடே ஊருல நிறைய பேரு சோறாக்கிட்டு எல்லாரும் எல்லாரும் வாங்கன்னு சொல்லிட்டு இருக்காய்ங்க,.. அவிங்க மனசு கஷ்டப்படக்கூடாதுல, அதான் போய் சோறு தின்னூட்டு மொய் வச்சிட்டு வர்ரேன்"

"சரி மச்சான் நீ சொன்னா சரியாதான் இருக்கும், பதிவை படிச்சவுடனே பின்னூட்டமே எழுத தோணல, ஆனா என்ன பண்ணுவ"

"கேளு, இந்த மாதிரி",. கீழே குனிந்து மண்ணில் போட்டுக் காட்டினார்,.
:)

:)))))))))))))))))

:D

"அப்புறம்"இது நான்தான்

:(


:((((((((((((((


"எல்லாம் சரி, இதைவிட கொஞ்சம் பெருசா எழுதனும்னா??"

"அவ்வ்வ்வ்வ்வ்"

"என்ன படிச்சொனே வாந்தி வருதுனு சொல்றீயா?"

"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,.."

"என்னா மச்சான் ரொம்ப வாந்தி வருதா??"

"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், வேணாம், நான் அழுதுறுவேன்,.." வடிவேலு மாதிரி அழுதுக்காட்டினார்.

"ஓ அந்த அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வா"

"சரி, பதிவு உண்மையிலேயே நல்லா இருக்கு,.. என்ன எழுதுவ?"

"அருமை, அற்புதம், கலக்கிட்டிங்க தல, கலங்கிட்டோம் தலைவா, பாராட்டுகள் தலை, சூப்பர் பாஸ், நல்லாயிருக்கு, அருமையான பதிவு, பெயர் சொல்லும் பதிவு, அழுகை வருது, சிரிச்சு சிரிச்சு வாயெல்லாம் வலிக்கிது, பக்கத்துல இருக்கவனுக்கு வயிறெல்லாம் வலிக்குது, ஹா ஹா ஹா. ஹி,ஹி,ஹி, ரைட்டு., ரொம்ப ரைட்டு, கலக்கல்.அடிச்சு ஆடுங்க!, சிங்கம் கிளம்பிடுச்சு,"

"என்ன மச்சான் அங்க சத்தம்"

"மாப்பிளே, யெதோ யான நிக்கிற மாதிரி தெரியுதுடா"

"அடே ஆமாண்டா, அய்யோ ஓடுறா, ஓடுறா,

"பள்ளம், பள்ளமா பாத்து ஓடுறா, அப்பதான் யான தொறத்தாது"

"சரிடா, சரிடா,."

ஓடினோம். எங்களுக்கும் யானைகளுக்கும் கொஞ்சம் இடைவெளி அதிகரித்து கொண்டு இருந்தது,.. (இடைவெளி என்றால் மெரினா கடற்கரை ரோட்டிலிருந்து கடல் அலை உள்ள தூரம்)

என் நண்பர் கொஞ்சம் பாசமாக வளர்ந்தவர் (அப்படினா தொப்பை ஜாஸ்தினு அர்த்தம்) என்பதால் அவரால் ஓட முடியவில்லை. பக்கத்தில் உள்ள குகை போல புதரில் பதுங்கிவிட்டார். அது மிக சின்ன இடம். பக்கத்திலேயே நானும் பதுங்கினேன். அந்த இடத்தில் நான் தான் முன்னாடி இருந்தேன். "அய்யோ யானை மிதித்தால் நம்மைதானே முதலில் மிதிக்கும்" இவன் வேறு பக்கத்தில் நீராவி ரயில் மாதிரி புஸ் புஸ்சென்று மூச்சு வாங்கி கொண்டிருக்கிறான். "ஆகா, இவன் பக்கத்தில் உக்காந்தா பாம்பு படமெடுத்தா கூட தெரியாது,.. ஓடிட வேண்டியதுதான்"

"மச்சான் நான் மரத்துல ஏறி உட்கார்ந்துர்ரென்"

"மாப்ளே எனக்கு மரமேற தெரியாதுடா"

"அதான் எனக்கு தெரியுமே"

நான் சத்தமில்லாமல் வேகவேகமாக சரசரவென பக்கத்தில் இருந்த ஆல மரத்தில் ஏறினேன். நான் ஏறியதை கண்டு மரத்தில் இருந்த குருவிகள் கீஸ்கீச்சென கத்திக் கொண்டு பறந்தன. பறவைகள் சத்தம் கேட்டு மூணு யானைகள் எங்கள் பக்கம் வந்துவிட்டன. எனக்கு கொஞ்சம் தொலைவிலும் நண்பருக்கு ஒரு ஐந்து அடியிலும் அவை இருந்தன. நண்பர் குகை புதரில் இருந்ததால் அவ்வளவாக தெரியவில்லை. இப்போது எனக்கு ஒரு SMS வந்தது. நம் பின்னூட்ட நண்பர் அந்த டென்ஷனிலும் SMS அனுப்பினார்.

"மீ த ப்ர்ஸ்டு"

யானைகளுக்கு படிக்கவா தெரியும். என் மொபைல் சத்ததை கேட்டு விரு விருவென என் மரத்திற்கு கீழே வந்தன. எனக்கு உதற ஆரம்பித்துவிட்டது. எனக்கு பயத்தில் பாத்ரும் வருவது போல் இருந்தது. வேறு வழியில்லை. அடிச்சிட வேண்டியதுதான். மொபைலில் அனுப்பி வைத்தேன்

"ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்"

நான் பின்னூட்ட நண்பருக்கு அனுப்பிய SMS எப்படி யானைகளுக்கு தெரிந்தது. பரவாயில்லை நல்ல ரிங் டோன்.

"ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்கங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கங்"







19 கருத்துகள்:

jothi சொன்னது…

// மீ த ப்ர்ஸ்டு //

இதையெல்லாம் படித்து கோபமாகி பின்னூட்டமிடாமல் இருக்காதீர்கள். உற்சாகப்படுத்துங்கள் நண்பர்களே,.

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

ஒரிஜினல் மீ த ஃபர்ஸ்டு நான் தான்

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

//என் நண்பர் கொஞ்சம் பாசமாக வளர்ந்தவர் (அப்படினா தொப்பை ஜாஸ்தினு அர்த்தம்) என்பதால் அவரால் ஓட முடியவில்லை. பக்கத்தில் உள்ள குகை போல புதரில் பதுங்கிவிட்டார்.//

என்ன கொடுமை இது.,

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

//ன் மொபைல் சத்ததை கேட்டு விரு விருவென என் மரத்திற்கு கீழே வந்தன. எனக்கு உதற ஆரம்பித்துவிட்டது. எனக்கு பயத்தில் பாத்ரும் வருவது போல் இருந்தது. வேறு வழியில்லை. அடிச்சிட வேண்டியதுதான்.//

அடிச்சிடுங்க

jothi சொன்னது…

"கரக்கிட்டு, இன்னும் தூங்கலையா நீங்க??" தூங்கறதுக்கு முன்னாடி படிச்சிட்டு தூங்குங்க,.

jothi சொன்னது…

//அடிச்சிடுங்க///

ஹா ஹா ஹா.

jothi சொன்னது…

நன்றி சுரேஷ். எனக்கு இவ்வளவு சீக்கிரம் பின்னூட்டமிட்டது நீங்கள்தான்,.

ஆபிரகாம் சொன்னது…

மீ த 8

தேவன் மாயம் சொன்னது…

நல்ல நேரத்தில் எஸ்.எம்.எஸ் வருது பாருங்க!!

தேவன் மாயம் சொன்னது…

ஏங்க இது உண்மையா?

jothi சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி ஆப்ரகம்

jothi சொன்னது…

//ஏங்க இது உண்மையா?//

உண்மையா, ??? நல்லாத்தான் கெளப்பிறிங்க பீதிய,..

நன்றி. தேவன் மையம்

M.Rishan Shareef சொன்னது…

:))))))

Beski சொன்னது…

அய்ய்ய்யோ... புதுசா ஏதாவது போடனுமே?!

jothi சொன்னது…

மிக்க நன்றி ஷெரிப். அடிக்கடி வலைப்பக்கம் வாங்க

jothi சொன்னது…

//அய்ய்ய்யோ... புதுசா ஏதாவது போடனுமே?!//

நீங்கள் போடுகிற அனைத்து பதிவுமே புதுமைதான்.

jothi சொன்னது…

நீங்கள் போடுகிற அனைத்து பதிவுமே புதுமைதான். நன்றி எவனோ ஒருவன்.

தமிழிஷ்ல வரும்னு பார்த்தா ஊத்திக்கும் போல இருக்கே. வர்ரவங்க கொஞ்சம் ஓட்டும் போட்டுட்டு போங்கப்பா,.. புண்ணியமா போகும். கடைசியா எடுத்த படமும் போணியாகல,..

கிள்ளிவளவன் சொன்னது…

nandru.

jothi சொன்னது…

மிக்க நன்றி கிள்ளி வளவன். உங்கள் பேர் மிக இனிமை. நல்ல தமிழ் பெயரை பார்ப்பது குறைந்து கொண்டே வருகிறது.

வருகைக்கு நன்றி

கருத்துரையிடுக