திங்கள், 27 ஏப்ரல், 2009

அண்ணா பல்கலைகழகமும் நொந்த கண்ணனும்

அண்ணா பல்கலைகழகத்தைப்பற்றி நிறைய எழுதலாம். இதில் மிக முக்கியமாக நான் கருதுவது அண்ணா பல்கலைகழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கும் அதன் கீழ் வரும் மற்ற கல்லூரிகளுக்கும் வேறு வேறான "question papers" & Resultsபற்றி.நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே குப்பை கொட்டியதால் அதை பற்றி நன்றாகவே தெரியும். இங்கே வகுப்புகள் நடக்கும், ஆனால் உதவி பேராசிரியர்களோ, இல்லை மற்ற பேராசிரியர்களோ வருவது இல்லை. "செமினார்" என்ற முறையில் மாணவர்களே எடுக்கவைக்க படுகிறார்கள். இங்கே GRADE SYSTEM, 50% internal MARKS, புழுத்துப்போன ASSIGNMENT என மாணவர்கள் நசுக்கப்படுகிறார்கள். தனியார் கல்லுரிகளை quality என்ற பேரில் பல்வேறு விதங்களில் மிரட்டும் இப்பல்கலைகழகத்தின் உண்மையான தரம் என்பது அங்கே உள்ள சோதனை கூடங்களை பார்த்தால் தெரியும். நான் படித்ததற்கும் இப்போதைக்கும் 8 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் டெக்னாலஜி சொல்லி தர இங்கே வசதிகள் செய்யப்பட வில்லை, திறமையான ஆட்களும் இல்லை. இங்கே என் கேள்வி ஒன்றே ஒன்றுதான். ஏன் அண்ணா பல்கலைகழகம் அனைத்து கல்லுரிகளுக்கும் ஒரே syllabus வைக்கும்போது தனக்கும் மற்ற கலலுரிக்கும் தனி தனியாய் எக்ஸாம் ஏன்? மற்ற தனியார் கல்லுரிகளுக்கு மட்டும் ஏன் ranking? ஓட்ட பந்தயம் என வந்த பிறகு சிறுத்தை என்றால் என்ன ? சிங்கம் என்றால் என்ன? இங்கே சிங்கத்திற்கு நன்றாக தெரியும். அதனாலதான் வர மறுக்கிறது. உண்மையிலேயே மற்ற கல்லூரிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என அக்கறை அண்ணா பல்கலைகழகதிற்கு உண்டென்றால் அதுவும் அனைத்து கல்லூரிகளின் தேர்வில் தன்னயும் இணைத்து கொள்ள வேண்டும். அனைத்து கல்லூரிக்கும் பொதுவான campus interview நடத்த வேண்டும். அதுவே முறையான அளவுகோலாய் அமையும். ஆனால் இன்று கல்வியும் அரசியலும் ஒன்றாய் விட்டதால் இது நடக்கும் என எதிர்பார்ப்பது நம் முட்டாள்தனம்.

4 கருத்துகள்:

Happy Smiles சொன்னது…

ello Friend, Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is "Improving self concept through blogging". In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.
Regards
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India

Arun Kumar சொன்னது…

REC (NIIT)யிலும் இதே நிலைதானே.
பொதுவாக அண்ணாவில் இடம் கிடைத்தவர்கள் தானாக படித்துவிடுவார்கள் என்று ஆசிரியர்களும் மெத்தனமாக இருப்பார்கள் போலும்.

அண்ணாவின் கீழ வரும் மற்ற கல்லூரிகள் தனி நிர்வாகத்தில் வருகிறதா அல்லது கிண்டி கல்லூரியின் கீழ் வருகிறதா?

Arun Kumar சொன்னது…

word verification எடுத்து விடுங்களேன் !!

jothi சொன்னது…

நன்றி அருண். அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் Guindy engineering college, A C Tech, Chrompet MIT, B ARCH ஆகிய நான்கும் நேரடியாக வருகின்றன. தமிழக அரசு அனைத்து Enginnering college தரத்தை உயர்த்த அனைத்து தனியார் காலேஜ்ஜையும் அண்ணா பல்களிகழ்காதின் கீழ் இணைத்து. தனியார் காலேஜூக்கும் Guindy engineering காலேஜ்'ர்கும ஒரே syllabus ஆனால் different questions,exam, results. இங்கே syllabus பற்றி சொல்லயே ஆக வேண்டும். ஒரு சில subjects 1992 என்ன இருந்ததோ அதுவே இன்னமும் இருக்கின்றன. (Ex : Chemcial reaction engineering).



ஆலோசனைக்கு மிக்க நன்றி.இபோதுதான் Blog பக்கம் வந்து இருகிறேன். Removed.

கருத்துரையிடுக