- லைட் சுவிட்சுகள் மிக சிறந்த மின்சார சேமிப்புகள். விளக்கு எப்போதெல்லாம் தேவையில்லையோ அப்போதெல்லாம் அணைத்திடுங்கள். தேவைப்படும் விளக்குகளை மட்டும் பயன்படுத்துங்கள். உதாரணமாக பூஜையறைக்கு அதற்கான குறைந்த செயல்திறன் பல்பை மட்டும் பயன்படுத்துங்கள். முழு அறையையும் ஒளியூட்ட வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்டால் ஒழிய.
- தூசுகள் உங்கள் விளக்கின் ஒளியில் 50% விழுங்கிவிடும். எனவே பல்புகளின் வெளிப்புறம் உள்ள தூசிகளை அடிக்கடி சுத்தப்படுத்துங்கள்.
- வீட்டில் உருண்டை விளக்கு (அதாங்க குண்டுபல்ப்) இருந்தால் முதலில் அதனை மாற்றிவிட்டு ப்ளரசென்ட் லைட்டோ, குழல் விளக்கோ (டியூப் லைட்) மாற்றுங்கள். இதனால் வெளிச்சத்திற்காக நாம் வழக்கமாக செலவிடும் மின்சாரத்தில் 75% சதவீதம் வரை மிச்சப்படுத்த முடியும். உதாரணமாக உருண்டை 60watt தரும் வெளிச்சத்தை 15wattப்ளூரசெண்ட் விளக்கு தந்துவிடும். உருண்டை விளக்கினால் அறைக்கு அதிகம் வெப்பம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்
- கோடை கால வெயிலுக்கு எதிராக முதலில் காற்றாடி (பேன்) பயன்படுத்துங்கள். வேறு வழியில்லை எனும் போது AC பயன்படுத்த ஆரம்பியுங்கள். காரணம் அனைவருக்கும் தெரிந்ததே. பேன் ஓடும் போது ஒரு மணி நேரத்திற்கு 30 பைசா செலவாகும்போது ஏ.சிக்கு 7 ரூபாய் வரை செல்வாகிறது.
- வீட்டிற்குள் வெயில் வருவதற்கான வழிகளை (ஜன்னல் போன்றவை) மரங்களையோ இல்லை மறைப்பான்களையோ பயன்படுத்துவதால் 40% வரை ACக்கான மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.
- ஏசி வெப்பனிலையை மிக குறைந்த நிலையில் (set@ 21 செல்சியஸ்) வைப்பதற்கு பதில் கொஞ்சம் மிதமான நிலையில் (set@ 25 செல்சியஸ்) வையுங்கள். இதனால் கணிசமான அளவில் (10-15%) மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும்.
- நல்ல ஏசி 30 நிமிடத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் குளிரூட்டிக்கொண்டு இருக்கும். இதனால் டைமரில் வைத்து குறிப்பிட்டகால இடைவெளியில் அணைத்து வையுங்கள். ஏசி போட்டிருக்கும் போது கதவுகளை மூடியே வைத்திருக்க குழந்தைகளையும் பழக்கப்படுத்துங்கள். ஏசி பிள்டர்களை மாதம் ஒரு முறை சுத்தப்படுத்துங்கள். செப்பனிடப்படாத ஏசி பிள்டர்கள் ஏசியின் ஆயூட்காலத்தை குறைப்பதுடன் அதிக மின்சாரத்தையும் இழுக்கிறது.
- குளிர்சாதனப்பெட்டியை வெப்பமான இடங்களில் வைப்பதை தவிருங்கள். உதாரணமாக நேரடியாக சூரிய வெளிச்சம் படுதல், ஓவன் அருகில் வைத்தல் போன்றவை. ப்ரிட்ஜின் உட்புற லைட் கதவு மூடி இருந்தாலும் வெளியே வெளிச்சம் தெரிந்தால் கதவின் ரப்பரை மாற்றுங்கள்.
- ப்ரிட்ஜில் உள்ள மோட்டர்/கம்ப்ரஸ்ஸர் தொடர்ந்து வெப்பத்தை வெளியே விடுவதால், ப்ரிட்ஜின் பின் புறத்தை சுவற்றை ஒட்டி வைக்கதீர்கள். கொஞ்சம் இடைவெளி விட்டு வைப்பதால் காற்று சுழற்சியினால் ப்ரிட்ஜ் அதிகம் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
- சூடான பொருட்கள் ஆறின பின் உள்ளே வைக்கவும். அதே போல் ப்ரிஜில் வைத்த மாவை எடுத்து தோசை சுடும் போது ஒரு அரை மணி நேரம் முன்னதாக வெளியே எடுத்து வைத்துவிடுங்கள். இது மின்சாரத்தை சேமிக்க உதவாது. மாறாக கேசினை பயன்படுத்தும் அளவை குறைக்கும்.
- ப்ரிட்ஜ் பின்னால் உள்ள காயில்களில் தூசி படிந்தால் துடைத்து விடவும்,. அதிகமான தூசி மின்சாரத்தை அதிகப்படுத்தும்.
- ஹீட்டர்களை தேவையில்லாமல் அதிகம் பயன்படுத்தாதீர்கள். ஹீட்டர்களின் உள்ளே உள்ள coilகளை முறையாக சுத்தம் செய்யவும். சுத்தப்படுத்தபடாத coilகளினால் அதிகம் மின்சாரம் செலவாகிறது
- கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தாமல் இருக்கையில் அணைத்துவிடுங்கள். அப்படியே CPU மட்டும் பயன்படுத்த வேண்டுமென்றால் மானிட்டரை ஆப் செய்துவிடுங்கள்.
- பேட்டரி சார்ஜர், லேப்டாப் பவர் கனெக்டர் போன்றவை மாட்டி இருந்தாலே மின்சாரத்தை இழுக்கும். எனவே அவற்றை பயன்படுத்தவில்லை என்றால் அணைத்துவிடுவது நல்லது.
- கம்பியூட்டர்களை ஸ்லீப் மோடில் வைப்பதால் 40% வரை மின்சாரம் மிச்சப்படுத்தலாம்
மின்சாரம் தொட்டால்தான் ஷாக் அடிக்கும்,. சம்சாரம் நம்மை பார்த்தாலே ஷாக் அடிக்கும். அதனால்தான் சம்சாரம் அது மின்சாரம்,.. ஹி ஹி இது சும்மா,.. வீட்டிற்கு எஜமானி சம்சாரம்தானே,. எனவே நாம் மிச்சப்படுத்தும் ஒவ்வொரு கிலோ வாட்டு(kW)க்கும் நம் மனைவியின் பங்கு மிக முக்கியம்.அதற்காக ஆண்களுக்கு சம்பந்தமில்லை என அர்த்தமாகாது.
-----------------------------------------------------------------------------------------
இன்று ஏன் இந்த பதிவு என நினைக்கிறார்களா?
நீங்கள் TV போட்டுக்கொண்டு பேப்பர் படிக்கிறீர்கள். உண்மையில் பார்த்தால் உங்களுக்கு தேவைப்படாத மின்சாரத்திற்கு எங்கோ ஒருவர் நிலக்கரியை எரித்து மின்சாரத்தை அனுப்பி வைக்கிறார். ஆனால் அதை நாம் பயன்படுத்தவில்லை. இதனால் சூழ்னிலை சூடாகிறது, பனிக்கட்டி உருகிறது, ஓசோன் ஓட்டை ஆகிறது, மழை பொய்கிறது. இப்படி நிறைய.இதன் விளைவுகளை இன்று முழுமையாக அனுபவிக்காவிட்டாலும் நம் சந்ததிகள் கண்டிப்பாக அனுபவிக்க நேரும். ஆதலால் மின்சாரத்தை சேமிப்பு எந்தளவிற்கு முக்கியமோ அதைவிட மிக முக்கியம் பயன்படுத்தப்படாமல் செலவாகும் மின்சாரம்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் முதன்முதலில் பூமி நாள் 2007ல் ஆல் ஆரம்பிக்கப்பட்டது. அது இன்று கடைபிடிக்கப்படுகிறது. இன்று இரவு 8:30 மணிக்கு மேல் ஒரு மணி நேரம் விளக்குகளை அணைப்பதால் மிக அதிகமான அளவு கொண்ட மின்சாரம் சேமிக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு 100 மில்லியன் மக்கள் பங்கெடுத்தார்கள். நாமும் இதை கண்டிப்பாக அமல் படுத்த முயற்சி செய்வோம். (தமிழ் நாட்டில் ஏற்கனவே ரொம்ப பவர்கட் எனக்கேள்விப்பட்டேன்)
நாம் மிச்சப்படுத்தும் ஒரு குண்டுபல்பின் மின்சாரத்தால் வரும் பலன்கள் நிறைய, அதனால் இந்த பதிவை கண்டிப்பாக தொடர்கிறேன் (பின்னூட்டமோ, ஓட்டோ வரவில்லை ஒன்று கூட வரவில்லை என்றாலும்),.
.
35 கருத்துகள்:
அட...நாந்தான் முதல் சுவிட்ச்..
விளக்கு எரியுது
நிறைய தகவல் புதையல்கள் பகிர்வுக்கு நன்றி
ரொம்ப பயனுள்ள பதிவுதான்.
கட்டாயம் தொடருங்கள்
பின்னோடிற்கு காக பதிவு போட வேண்டாம்...... உங்களுது பதிவு நன்றாக உள்ளது..... தானாக கூட்டம் சேரும்......
நல்ல வெளிச்சம் இருந்தால் கண்டிப்பாக பூச்சிகள் மொய்க்கும்... அதனால்,எதையும் எதிர்ப்பார்க்காமல் உங்கள் இயல்பான எண்ணத்தில் எழுதுங்கள்.
வாங்க சதீஷ்,.. மிக்க நன்றி பின்னூட்டமே கலக்கலா போட்டுறீங்க (முதல் பின்னூட்டம், சுவிட்ச், அடுத்த பின்னூட்டம் விளக்கு எரியுது)
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சதீஷ்
வாங்க கமலேஷ்,மிக்க நன்றி,
//பின்னோடிற்கு காக பதிவு போட வேண்டாம்...... உங்களுது பதிவு நன்றாக உள்ளது..... தானாக கூட்டம் சேரும்......//
வாங்க உனக்குள் ஒருவன்,.. கூட்டம் சேர வேண்டுமென்று பதிவுகள் எழுதவில்லை. கூட்டம் சேர்ப்பதற்கான கலையும், ஹிட்டாவதற்கான வழியும் பெரும்பாலும் எல்லா பதிவர்களுக்கும் தெரிந்ததே.என் மற்ற பதிவுகள் எப்படியோ,.. ஆனால் பெரும்பாலான அறிவியல் தொழில்னுட்ப பதிவுகள் என் திருப்திக்காகத்தான் எழுதுவது. பலனான ஆரோக்யமான விவாதங்கள் நடத்த தொழில்னுட்ப பதிவுகள் சிறந்தவை. அந்த விவாதங்களுக்காகத்தான் பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறது. இப்போது இல்லாவிட்டாலும் இன்னும் சில ஆண்டுகளில் இதை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி உனக்குள் ஒருவன்.
வாங்க நையாண்டி மேளம், உண்மைதான். ஈக்கள் மொய்க்க சுவையாகவும், வெளிச்சமாகவும் இருக்க வேண்டும், முயற்சி செய்கிறேன். கருத்திற்கு மிக்க நன்றி
ஜோதி...அருமை அருமை.நம் நாடுகளுக்கு மிகவும் மிகவும் தேவையான பதிவு.கவனிப்பார்களா என்பது மட்டுமே.வரிசைகளில் மனதில் மிகப்பிடித்தது ஜன்னல்களை மறைக்க மரங்கள் வளர்ப்பது பற்றி.என்னை ஊருக்கே போகவைத்தது.செயற்கை வாழ்க்கை வாழ்ந்து வேணாம்ன்னு போகுது ஜோதி !
வாங்க ஹேமா, மிக்க நன்றி
//செயற்கை வாழ்க்கை வாழ்ந்து வேணாம்ன்னு போகுது ஜோதி !//
உண்மைதான், எனக்கென்னவோ அரசமரமும், சிமென்ட் திட்டும்தான் இன்னமும் பிடித்திருக்கிறது,..
///மின்சாரத்தை சேமிப்பு எந்தளவிற்கு முக்கியமோ அதைவிட மிக முக்கியம் பயன்படுத்தப்படாமல் செலவாகும் மின்சாரம்.//
பகல் நேரத்துல தேவையில்லாம விளக்குகள் எரிவதையும் நிறுத்தனும் நல்ல டிப்ஸ் :-)
மிக சரி ஜெய்லானி, பகல் நேரங்களில் கூட நாம் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டி இருக்கு. சுற்றிலும் வீடுகள் இருக்கையில் நம் வீடு தரைத்தளத்தில் இருந்தால் மிக கஷ்டம்தான்,..
//பின்னூட்டமோ, ஓட்டோ வரவில்லை ஒன்று கூட வரவில்லை என்றாலும்..// என்னாங்க இப்படிச் சொல்லீட்டீங்க..நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம்..அப்ப்டி விட்டிடுவோமா?..இப்போ குத்துறேன் பாருங்க!
நல்ல பயனுள்ள விஷயங்கள் நிறைந்த பதிவு.
வாழ்த்துக்கள்.
வாங்க செங்கோவி,
ஒரு பேச்சிற்கு சொன்னது தப்பா போச்சே,.. ம்ம்ம்,..
ஓட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
வாங்க ரத்னவேல் ஐயா,..
மிக்க நன்றி
சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட பதிவு.
வாங்க சித்ரா,.. மிக்க நன்றி
அருமையான இடுகை..
ஜோ...செம விழிப்புணர்வு பதிவு...எனக்கு இடையில் நீங்கள் நக்கலாய் குறிப்பிட்ட அந்த சம்சாரம்,மின்சாரம் விளக்கம் கூட ரொம்பவே ரசிச்சேன்...ஜோ..தேவை..உங்கள் சேவை...ஹ ஹ..
வாங்க அமைதிசாரல்,.. மிக்க நன்றி
வாங்க ஆனந்தி,.. எப்படி இருக்கீங்க?
கருத்திற்கு மிக்க நன்றி. (நான் நக்கலாவெல்லாம் சொல்லைலங்க ,. ஜாலியாதான் சொன்னேன் (ஹி ஹி மனைவிக்கு மரியாதை)
தங்கள் பதிவை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு உள்ளேன்...
http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_19.html
வலைச்சரத்தில் தங்களின் உபயோகமான பதிவை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2011/04/to-z-tips-pedia.html
Anandhi,
Many thanks for your recommendation on useful blog list. It is really good credit for me.
Sorry for the late response. I am in chennai and really no mood to sit in internet. Once again my sincere thanks to you
Janaranjagamaana idugai boss..rasithen...
நல்ல பயனுள்ள பதிவு
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.
தற்போது தான் படித்தேன் பயன்பெற்றேன். தற்போது என்னிடம் மின்சாரம் தான் உள்ளது. அதனை சரியாக பயன்படுத்துகிறேன்...
நன்றி
சித்திரன்
http://chithiran-vel.blogspot.com/
Super sir... super... sorry for very very late comment :(
@டக்கால்டி,சந்ரு,இராஜராஜேஸ்வரி,சித்ரவேல் - சித்திரன்,ஆகாய நதி மற்றும் நண்பர்களுக்கு தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்க. உங்களின் கருத்திற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. பணிச்சுமையின் காரணமாக (ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா,...) என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை. இருந்தாலும் இந்த பதிவை கண்டிப்பாக இன்னும் இரண்டு நாட்களில் தொடர்கிறேன்,..
நல்ல பயனுள்ள பதிவு
வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/5.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...
கருத்துரையிடுக